இலவச மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம்
11/27/2020 5:39:18 AM
சிவகங்கை, நவ.27: நீர்ப்பாசன வங்கிக்கடன் பெற்ற விவசாயிகள் இலவச விவசாய மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் மூலம், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தால் மானியத்துடன் கூடிய நீர்ப்பாசன கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் பெற்று ஆழ்துளை கிணறு அமைத்து அதற்கு இணையான மானியத்தொகை பெற்ற பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின வகுப்பைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டும் இலவச மின் இணைப்பு பெறுவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இலவச மின் இணைப்பு பெற கடன் மற்றும் மானியம் பெற்றதற்கான வங்கி புத்தக நகல், இலவச மின் இணைப்பு வழங்கக் கோரி மின் பகிர்மான பதிவு செய்த அட்டை நகல், 10(1) சிட்டா ஆகிய ஆவணங்களை இணைத்து சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் அளிக்க வேண்டும். கூடுதல் தகவல்களை sivaganga.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
திடீரென கரண்ட் கட் செல்போன் வெளிச்சத்தில் நடந்த அமைச்சர் விழா
காரைக்குடி தனி மாவட்டம் கேட்டு ஆர்ப்பாட்டம்
அனுமனுக்கு 5008 வடை மாலை
பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் மீண்டும் முளைக்கும் நெல் மணிகள் கல்லல் விவசாயிகள் கவலை
பாதாள சாக்கடை பணிகளை முடிக்க கோரி காரைக்குடியில் ஆர்ப்பாட்டம் கடைகள் அடைப்பு
பூவந்தியில் 9 ஆண்டுக்குபின் நெல் விவசாயம் கண்மாய் நீரை நம்பி களமிறங்கும் விவசாயிகள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்