அரசு பள்ளியில் படித்த இரண்டு மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் இடம்
11/27/2020 5:38:23 AM
கமுதி, நவ.27: கமுதி அருகே டி.வல்லக்குளம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் அருண்குமார் நீட்தேர்வில் 282 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். இவருக்கு இடஒதுக்கீட்டில் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இதேபோல் ராமசாமிபட்டியை சேர்ந்த ஜவுளி வியாபாரி விநாயகவேல். இவரது மகன் முத்துப்பாண்டி கடந்த வருடம் நீட்தேர்வு எழுதி தோல்வியடைந்து, பின்னர் பெரம்பலூரில் உள்ள விவசாய கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் பின்னர் விடாமுயற்சியுடன் இந்த வருடம் மீண்டும் நீட்தேர்வு எழுதி 236 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று தமிழக அரசு அறிவித்திருந்த 7.5 இடஒதுக்கீடு அடிப்படையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்துள்ளது.
மேலும் செய்திகள்
மழையால் விவசாயம் பாதிப்பு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் போகலூர் ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம்
கால்நடை முகாம் நடத்த கோரிக்கை
பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி முகாம்
நெற்பயிருக்கு நிவாரணம் வழங்க திருவாடானை பகுதியில் கணக்கெடுக்கும் பணி தீவிரம்
தனியார் விடுதியில் லேப்டாப் திருடிய வாலிபர் கைது
ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கஞ்சாவுக்கு அடிமையாகும் இளைஞர்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்