நிவர் புயலால் கடலூர் மாவட்டத்தில் கனமழை 55 ஆயிரம் பேர் முகாம்களில் தஞ்சம் 3 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின
11/27/2020 5:36:25 AM
கடலூர், நவ.27: கடலூர் மாவட்டத்தில் நிவர் புயலால் ஏற்பட்ட மழையால் 55 ஆயிரத்து 226 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 3 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை நிவர் புயலாக உருவெடுத்து மரக்காணம் அருகே நேற்று அதிகாலை கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நேரத்தில், கடலூர் பகுதியில் பலத்த காற்று வீசியது. காலை 10 மணி வரை தொடர்ந்து மழை பெய்தது. அதிக பட்சமாக கடலூர் பகுதியில் 29 செமீ மழை பதிவாகியது. கனமழை காரணமாக கடலூர் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. புயல், மழையால் பாதிக்கப்பட்ட 55 ஆயிரத்து 226 பேர் 21 பல்நோக்கு சிறப்பு முகாம் உள்ளிட்ட 441 முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.புயல் காரணமாக மாவட்டம் முழுவதும் 321 மரங்கள் முறிந்து விழுந்தன. 12 கால்நடைகள் உயிரிழந்தன. 21 கூரை வீடுகள் இடிந்து விழுந்தன. கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி உள்ளிட்ட இடங்களில் 77 மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. புயல் பாதிப்பால் மலை கிராமங்களான ராமாபுரம், எம்.புதூர், ேஜடர்பாளையம், குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பகுதியில் 200 ஏக்கர் வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தன. மணிலா மற்றும் பன்னீர் கரும்பு சாகுபடியும் பாதிக்கப்பட்டது. 3ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.புயல், மழையால் நேற்று முன்தினம் முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நேற்று மாலை வரை மின்சாரம் வழங்கப்பட வில்லை.
சொத்திக்குப்பம், ராசாபேட்டை, சித்திரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கடல் நீர் கிராமத்திற்குள் புகுந்ததால் படகுகள் சாலை பகுதிக்கு அடித்து செல்லப்பட்டது. அங்குள்ள மீனவ மக்கள் பாதுகாப்புடன் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 5 ஆயிரம் வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. மழை குறைந்த நிலையில் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பேருந்து சேவை தொடங்கியதுபுயல், மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவை நேற்று முன்தினம் முதல் நிறுத்தப்பட்டது. புயல் கரையை கடந்த நிலையில் நேற்று பிற்பகல் முதல் பேருந்துகள் ஓடத் தொடங்கின. இதே போன்று புயல் காரணமாக மூடப்பட்டிருந்த கடைகளும் நேற்று மாலை திறக்கப்பட்டன.
மேலும் செய்திகள்
புதிதாக முதியோர் உதவித்தொகை வழங்க ஒப்புதல் அமைச்சரின் போராட்டத்தால் 17 கோப்புகளுக்கு அனுமதி
தமிழகம் மற்றும் புதுவையில் ரூ.10 ேகாடி மோசடி பைனான்ஸ் நிறுவன உரிமையாளர், 6 பேர் மீது சிபிசிஐடி வழக்கு பதிவு
அரசு செவிலியர் வீட்டில் 40 பவுன் நகை துணிகர திருட்டு
புதுவையில் புதிதாக 31 பேருக்கு தொற்று
புதுவையில் 23 பேருக்கு கொரோனா
திமுக தலைமையில் தான் கூட்டணி புதுச்சேரியின் 30 தொகுதியில் வெற்றி பெறாவிடில் தற்கொலை செய்து கொள்வேன்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்