ஓடையில் குளித்த வாலிபர் மாயம் தேடும் பணி தீவிரம்
11/27/2020 5:35:48 AM
திண்டிவனம், நவ. 27: விக்கிரவாண்டி அருகே பம்பையாற்று ஓடையில் குளித்த வாலிபர் மாயமானதால் தீயணைப்பு துறையினர் வாலிபரை தீவிரமாக தேடி
வருகின்றனர்.விழுப்புரம் தாலுகா வளவனூர் அருகே உள்ள வி.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன், விவசாய கூலித் தொழிலாளி. இவரது மகன் மணிவேல்(22), மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். நிவர் புயல் காரணமாக நேற்று முன்தினம் பெய்த மழையினால் கிராமத்தின் அருகே உள்ள வி.மாத்தூர் பம்பையாற்று ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று காலை 10 மணியளவில் மணிவேல் தன் நண்பர்களோடு சென்று ஓடையில் இறங்கி குளித்துள்ளார்.
அப்போது ஓடையில் தண்ணீரின் வேகம் அதிகரித்ததால் மணிவேல் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதுபற்றி தகவலறிந்த விக்கிரவாண்டி சப்-இன்ஸ்பெக்டர் பரணிநாதன், விழுப்புரம் தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை 7 மணி வரை வாலிபர் கிடைக்கவில்லை. இரவு நேரமாகிவிட்டதால் தேடும் பணியை இன்று தொடர உள்ளனர்.
மேலும் செய்திகள்
ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
உளுந்தூர்பேட்டை அருகே குழந்தையை ஏலம் விட்டு பக்தர்கள் வினோத வழிபாடு
உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு காரில் சடலமாக கிடந்த கோவை வாலிபர்
டிராக்டர் கவிழ்ந்து மூதாட்டி பலி
செங்குறிச்சியில் அனுமதியின்றி இயங்கி வந்த குடிநீர் கம்பெனிக்கு சீல்
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்