இவ்வாறு அவர் கூறினார். கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தர்ணா போராட்டம்
11/27/2020 5:35:37 AM
கடலூர், நவ. 27: கடலூர் அருகே உள்ள திருமாணிக்குழி கிராமத்தை சேர்ந்த பெண் தனக்கு ெசாந்தமான பட்டா இடத்தை ஆக்கிரமிப்பு என கூறி மழை தண்ணீர் வடிய பள்ளம் தோண்டியதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். கடலூர் அருகே உள்ள திருமாணிக்குழி கிராமத்தை சேர்ந்த மாணிக்கவேல்ராஜ் மனைவி சிவகாமி(52). இவர் நேற்று தனது மகள் புவனேஸ்வரியுடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார், பின்னர் அவர் திடீரென அலுவலக வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து கேட்டதற்கு அவர் வசித்து வரும் வீட்டு மனை தனக்கு சொந்தமானது ஆனால் சிலர் அந்த இடம் அரசு புறம் போக்கு இடம் என கூறி வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதே ஊரைச் சேர்ந்த சிலர் தேங்கியிருந்த மழை நீரை வடிய செய்ய பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டியுள்ளனர். அவர் இது பட்டா நிலம் எனக்கு சொந்தமானது என கூறியும் அவர்கள் கேட்கவில்லை என தெரிகிறது.. அதனால் தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து அந்த பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ஆட்சியரிடம் மனு கொடுக்குமாறு அறிவுறுத்தினர்.
மேலும் செய்திகள்
கடலூர் மாவட்டத்தில் முதல்முறையாக கொரோனா பாதிப்பு இல்லை
ஆண் குழந்தை கடத்தல்?
அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உதவி பேராசிரியர்கள் திடீர் போராட்டம்
நாதஸ்வர வித்வான் லாரி மோதி சாவு
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது
பதுக்கி வைத்து பெட்ரோல் விற்பனை: 2 பேர் மீது வழக்கு
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்