காவல் நிலையத்தில் வெள்ளம் புகுந்தது
11/27/2020 4:43:11 AM
சென்னை: நிவர் புயல் காரணமாக சென்னையில் பெய்த கன மழையால் கே.கே.நகர், எம்.ஜி.ஆர்.நகர், அசோக் நகர் பகுதிகளில் 2 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியது. அங்குள்ள வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது. நேற்று மாலை வரை வெள்ள நீர் வடியாததால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குறிப்பாக கே.கே.நகர் லட்சுமிசாமி சாலை, ஆர்.கே.சண்முகம் சாலை, அழகிரி சாலை என முக்கிய சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. கே.கே.நகர் காவல் நிலையம் தாழ்வான பகுதியில் உள்ளதால், நள்ளிரவில் காவல் நிலையத்தினுள் வெள்ள நீர் புகுந்தது. போலீசார் மணல் மூட்டைகளை காவல் நிலைய நுழைவாயிலில் அடுக்கி வைத்தனர். ஆனாலும், வரவேற்பு அறை, அய்வாளர் அறைகளில் தண்ணீர் புகுந்தது. போலீசார் பக்கெட் உதவியால் அதிகாலை வரை தண்ணீரை வெளியேற்றினர்.
மேலும் செய்திகள்
அக்கா கணவர் அடித்து கொலை: மைத்துனர் கைது
30க்கும் மேற்பட்ட வழக்கில் தொடர்புடைய பார்டர் தோட்டம் ரவுடி: வாகனம் மோதி கொலை?: போலீசார்விசாரணை
தூய்மை பணியாளர்கள் மறியல்
கல்லூரி மாணவிகளிடம் சில்மிஷம் தனியார் நிறுவன ஊழியர் கைது
பரிசு பொருள் விநியோகம் குறித்து புகார் அளித்தால் விரைந்து சோதனை நடத்துவதில்லை: அதிகாரிகள் மீது திமுக குற்றச்சாட்டு
அதிமுக மாவட்ட பொறுப்பாளர் சார்பில் வாக்காளர்களுக்கு வழங்க இருந்த 180 அரிசி மூட்டைகள் பறிமுதல்: அதிகாரிகள் நடவடிக்கை
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்