காற்றுடன் கூடிய கனமழைக்கு 387 மரங்கள் விழுந்தன 288 மின் கம்பங்கள் சாலையில் சாய்ந்தன
11/27/2020 4:43:04 AM
சென்னை: நிவர் புயல் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் அதிக கனமழை பெய்து. இதனால் புறநகர் பகுதிகளான முடிச்சூர், வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்கள் தண்ணீரில் முழ்கின. மேலும் நேற்று சென்னையின் பல்வேறு இடங்களில் அதிக வேகத்தில் காற்று வீசியது. இதனால் சென்னையில் 387 மரங்கள் விழுந்தன. இவற்றை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். இதைப்போன்று 288 மின் கம்பங்களும் விழுந்தன. இவற்றை அகற்றும் பணயில் மின் வாரியம் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்ட காரணத்தால் அடையாறு கரையின் ஓரத்தில் இருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இதன்படி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இவர்களுக்கு கொரோனா அறிகுறி சோதனை செய்யப்பட்டது. இதில் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் செய்திகள்
குப்பை லாரி சிறைபிடிப்பு
மகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தந்தை கைது
தாமதமாக வந்ததால் வாத்து நடை தண்டனை மாணவன் பலியான விவகாரத்தில் தந்தைக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு
ஜிஎஸ்டி செலுத்தாத வியாபாரியிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய வரித்துறை அதிகாரி கைது
காதலனுக்கு வேறு பெண்ணுடன் நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய காதலி
சென்ட்ரல் ரயில் நிலையம், அம்பத்தூர், தாம்பரத்தில் ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.5.95 லட்சம் பறிமுதல்
06-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!