வீரமச்சான்பட்டியில் நாளை ஆண்களுக்கு கு.க. சிகிச்சை ஏற்பாடு
11/27/2020 4:41:15 AM
திருச்சி, நவ.27: திருச்சி வீரமச்சான்பட்டி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம் 28ம் தேதி (நாளை) நடைபெறவுள்ளது. திருச்சி அருகே வீரமச்சான்பட்டி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் பங்கு பெறும் ஆண்களுக்கு அரசின் ஈட்டுத்தொகை ரூ.1,100 வழங்கப்படும். ஓரிரு நிமிடங்களில் மயக்க மருந்து கொடுக்கப்படாமல் அறுவை சிகிச்சை செய்யப்படும். அறுவை சிகிச்சைக்கு பின்பு மருத்துவமனையில் தங்கவேண்டியதில்லை. சிகிச்சை முடிந்த பிறகு வீட்டிற்கு செல்லலாம். கத்தியின்றி, ரத்த சேதமின்றி, தையல், தழும்புமின்றி செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சையால் பின் விளைவுகள் ஏதும் இருக்காது. எனவே, விருப்பமுள்ள ஆண்கள் இந்த அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம் என கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு திருச்சி மாவட்டத்தில் 23,32,886 வாக்காளர்கள்
புதிதாக 72,447 பேர் சேர்ப்பு ஹம்சவாகனத்தில் நம்பெருமாள் தண்ணீர் கலந்து மதுவிற்ற ரவுடி கைது
லேத் பட்டறை மெக்கானிக்கிடம் கத்தியைகாட்டி பணம் பறித்தவர் கைது
திருச்சி-தஞ்சை திருமண்டலத்தின் 37வது பேரவைக்கூட்டம்
திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்கம்
நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்