அன்னவாசல் வட்டாரத்தில் பயிர் காப்பீடு செய்ய 30ம் தேதி கடைசி விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
11/27/2020 4:34:37 AM
இலுப்பூர், நவ.27: அன்னவாசல் வட்டாரத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அன்னவாசல் வேளாண்மை உதவி இயக்குநர் பழனியப்பா கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அன்னவாசல் வட்டாரத்தில் 2020-2021ம் ஆண்டுக்கான சிறப்புப் பருவம் நெல் சம்பா பயிர்கள் சாகுபடி செய்து வரும் நிலையில், விவசாயிகள் அனைவரும் சம்பா பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெற்பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். மேலும் இயற்கை இடர்பாடுகளான வௌ்ளம், வறட்சி மற்றும் பூச்சி நோய் தாக்குதலினால் ஏற்படும் மகசூல் இழப்பு மற்றும் பாதிப்புகளிலிருந்து தாங்கள் வாழ்வாதாரத்தினையும், வருவாய் இழப்பினையும் சரிசெய்து கொள்ள திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து பயன்பெறலாம்.
நெல் பயிர் காப்பீடு செய்ய ஏக்கருக்கு பிரீமிய தொகையாக ரூ.458 செலுத்தவும், அதற்கு பயிர் இழப்பு காப்பீடு தொகை அதிகபட்சமாக ஏக்கருக்கு ரூ.30,500 பெறலாம். காப்பீடு செய்ய தேவையான ஆவணங்களான முன்மொழிவு படிவம், பதிவு படிவம், அடங்கல, சிட்டா நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பொது சேவை மையங்கள் ஆகியவற்றில் காப்பீடு தொகையை செலுத்தி பதிவு செய்யது பயன் பெறலாம். ஆகவே விவசாயிகள் வரும் 30ம் தேதிக்குள் காப்பீடு செய்து பயன்பெறலாம் என செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
இறுதி பட்டியல் வெளியீடு புதுக்கோட்டை மாவட்டத்தில் 13.48 லட்சம் வாக்காளர்கள்
53,124 பேர் புதிதாக சேர்ப்பு கொத்தமங்கலம் ஊராட்சியில் அதிமுகவை நிராகரிக்கிறோம் மக்கள் கிராமசபை கூட்டம்
இந்தியாவிலேயே தாய் சேய் நலம் பேணுவதில் தமிழகம் முதலிடம்
புதுக்கோட்டை அருகே பஸ்சில் பெண்ணிடம் 2 பவுன் செயின் திருட்டு
அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி தொடர் மழையிலும் பாதிக்காத பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி
இராணியார் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பு வழிமுறை கடைபிடிக்கப்படுகிறதா? மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்