நிவர் புயல் எதிரொலியால் மாவட்டம் முழுவதும் மழை மரங்கள் முறிந்து விழுந்தன
11/27/2020 2:00:27 AM
தர்மபுரி, நவ.27: தர்மபுரி மாவட்டத்தில், நிவர் புயல் எதிரொலியால் விடிய, விடிய மழை பெய்தது. அப்போது மரங்கள் முறிந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நிவர் புயல் எதிரொலியாக, தர்மபுரி நகரில் விடிய, விடிய மழை பெய்தபடி இருந்தது. இதனால் சாலையோர காய்கறி, பழக்கடைகள் வைக்கவில்லை. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மழையால் வாகனங்கள் இயங்கவில்லை. இதனால், எப்போதும் பரபரப்பாக காணப்படும் தேசிய நெடுஞ்சாலை நேற்று வெறிச்சோடியது. சிட்லிங், பெரியபட்டி, நரிப்பள்ளி, கோட்டப்பட்டி, பைரநாயக்கன்பட்டி, சிட்லிங் எஸ்.தாதம்பட்டி உள்ளிட்ட 6 மலைக்கிராமங்களின் வழியாக நேற்று மதியம் புயல் கடந்து சென்றது. இதனால் அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
மழைக்கு கோட்டப்பட்டி நெடுஞ்சாலையின் குறுக்கே மரங்கள் வேருடன் முறிந்து விழுந்தன. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலின் பேரில், தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று, சாலையில் விழுந்த மரங்களை வெட்டி அகற்றினர். இதன் பின்னர் வாகனங்கள் வழக்கம்போல் சென்றன. தர்மபுரி மாவட்டத்தில் பெய்த மழையளவு விவரம் வருமாறு(மில்லி மீட்டரில்): அரூர் 44, பாப்பிரெட்டிப்பட்டி 27 , பென்னாகரம் 10, தர்மபுரி 9, ஒகேனக்கல் 7, பாலக்கோடு 4, மாரண்டஅள்ளி 2 என மொத்தம் 103 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது.
மேலும் செய்திகள்
தர்மபுரி நகராட்சி 10வது வார்டில் தார்சாலை அமைக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
ரிக் உரிமையாளர் சங்க ஆலோசனை கூட்டம்
10மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு மாவட்டத்தில் 80 சதவீத மாணவர்கள் வருகை
ஓசூர் செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை
தர்மபுரி- கொப்பலூருக்கு நிறுத்தப்பட்ட டவுன் பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்
ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடக்கும் பயணிகள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!