உழவர் உற்பத்தியாளர் குழு துவக்கம்
11/27/2020 2:00:07 AM
தர்மபுரி, நவ.27: நல்லம்பள்ளி ஒன்றியம், பாலவாடி அருகே எம்ஜிஆர் நகரில் உழவர் உற்பத்தியாளர் குழு நேற்று துவக்க விழா நடந்தது. வேளாண்மை பொறியியல் துறை உதவிப் பொறியாளர் அறிவழகன் துவக்கி வைத்தார். இதுபற்றி தலைவர் அருள்மூர்த்தி, இயக்குனர் ரவி ஆகியோர் கூறியதாவது: இண்டூர் சுற்றுவட்டார பகுதியில் மானாவாரியாக கடலை, திணை, சாமை ஆகியவை விளைவிக்கப்படுகிறது. கடலை மற்றும் சிறுதானியங்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால், விவசாயிகளுக்கு உரிய லாபம் கிடைக்கும் என்பதற்காக 100 விவசாயிகள் சார்பில் உழவர் உற்பத்தியாளர் குழு துவங்கப்பட்டுள்ளது. இதற்கு அரசின் 90 சதவீத மானியத்தில் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மையத்தால் பேடரஅள்ளி, பாலவாடி, தளவாய் அள்ளி, சோமனஅள்ளி, பொம்ம சமுத்திரம், இண்டூர், அதகபாடி, பள்ளிப்பட்டி, கருபையனஅள்ளி, வேலம்பட்டி, ஓஜிஅள்ளி, தித்தியோப்பனஅள்ளி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயனடைவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் செய்திகள்
தர்மபுரி நகராட்சி 10வது வார்டில் தார்சாலை அமைக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
ரிக் உரிமையாளர் சங்க ஆலோசனை கூட்டம்
10மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு மாவட்டத்தில் 80 சதவீத மாணவர்கள் வருகை
ஓசூர் செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை
தர்மபுரி- கொப்பலூருக்கு நிறுத்தப்பட்ட டவுன் பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்
ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடக்கும் பயணிகள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!