துவரை செடிக்கு மருந்து தெளிப்பு விவசாயிகள் மும்முரம்
11/27/2020 2:00:01 AM
தர்மபுரி, நவ.27: தர்மபுரி மாவட்டத்தில் துவரை சாகுபடி ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் தொடங்குகிறது. மார்கழி அல்லது தை மாதத்தில் அறுவடை தொடங்கிவிடும்.தற்போது துவரை பூ பூத்து குலுங்குகிறது.மாவட்டம் முழுவதும் பருப்பு வகை பயிர் 19 ஆயிரம் ஹெக்டேரில் பயிரிடப்படுகிறது. தற்போது துவரம் பருப்புக்கு மார்க்கெட்டில் அதிக விலை கிடைப்பதால்,பெரும்பாலான விவசாயிகள் துவரை பயிரிட அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மாவட்டத்தில் தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு ஆகிய பகுதியில் துவரை சாகுபடி அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது.கடந்த புரட்டாசி, ஐப்பசி மாதத்தில் பெய்த மழையால்,தர்மபுரி அடுத்த இண்டூர், பாலவாடி பகுதியில் 100 ஏக்கருக்கு மேல் துவரை சாகுபடி செய்துள்ளனர். தற்போது துவரை செடிகள் நன்கு வளர்ந்து பூத்து குலுங்கிய நிலையில் உள்ளது.இதனால், பூச்சிகளில் இருந்து செடிகளை பாதுகாக்கும் வகையில், துவரை செடிகளில் பூச்சி மருந்து அடிக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
தர்மபுரி நகராட்சி 10வது வார்டில் தார்சாலை அமைக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
ரிக் உரிமையாளர் சங்க ஆலோசனை கூட்டம்
10மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு மாவட்டத்தில் 80 சதவீத மாணவர்கள் வருகை
ஓசூர் செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை
தர்மபுரி- கொப்பலூருக்கு நிறுத்தப்பட்ட டவுன் பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்
ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடக்கும் பயணிகள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!