கொரோனா பாதிப்பால் ஹெத்தையம்மன் பண்டிகையை எளிமையாக கொண்டாட முடிவு
11/27/2020 1:54:44 AM
ஊட்டி,நவ.27: நீலகிரி மாவட்டத்தில் ஹெத்தையம்மன் பண்டிகையை எளிமையாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்களின் குல தெய்வமான ஹெத்தையம்மன் கோயில் திருவிழா ஆண்டு தோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். கொரோனா பாதிப்பு காரணமாக இம்முறை மிகவும் எளிமையாக இவ்விழாவை கொண்டாட அனைத்து கிராமங்களிலும் முடிவு செய்துள்ளனர். ஊட்டி அருகேயுள்ள ேபரரார் பகுதியில் ஹெத்தையம்மன் பண்டிகைக்காக விரதம் எடுக்கும் நிகழ்ச்சி துவங்கியது. இங்கிருந்து பக்தர்கள் கொதுமுடி கோயிலுக்கு பாத யாத்திரையாக சென்றனர். வரும் 29ம் தேதி சக்கலாத்தி பண்டிகையை முன்னிட்டு ஹெத்தையம்மன் செங்கோல் பக்தர்கள் விரதம் மேற்கொள்ளும் நிலையில், இம்முறை ஒத்திகை நிகழ்ச்சியில் கோயில் பூசாரிகள் மட்டுமே பங்கேற்க முடிவு செய்துள்ளனர். அதேசமயம், வழக்கம் நடக்கும் அருள்வாக்கு அளிக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ஆனால், இதிலும், பக்தர்கள் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கம் போல் நடக்கும் அன்னதான நிகழ்ச்சிகள் இம்முறை தவிர்க்கப்பட்டுள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் முக்கிய திருவிழாவையும், மிக எளிமையாக கொண்டாட படுகர் சமுதாய மக்கள் முடிவு செய்துள்ளனர்.
மேலும் செய்திகள்
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஊட்டியிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு 40 சிறப்பு பஸ் வரும் 20ம் தேதி வரை இயக்கப்படுகிறது
ஊட்டி அரசு அருங்காட்சியகத்தில் புகைப்பட கண்காட்சி துவங்கியது
காட்டு யானை துரத்தியதில் கீழே விழுந்து இருவர் படுகாயம்
குத்தகை பாக்கி செலுத்தாததால் வருவாய்துறை நிலம் மீட்பு
வன உயரடுக்கு படை மூலம் முதுமலை புலிகள் காப்பக களப்பணியாளர்களுக்கு பயிற்சி
அரசு விழாவில் தி.மு.க., அதி.மு.க.வினர் அரசியல் பேசியதால் பரபரப்பு
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்
பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!
13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்