நிவர் புயலால் மாவட்டத்தில் சாரல் மழை
11/27/2020 1:51:36 AM
ஈரோடு, நவ. 27: நிவர் புயல் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் சாரல் மழை பெய்தது.
தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் காலை வரை தொடர்ந்த லேசான சாரல் மழை பெய்து வருகின்றது. மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் நேற்று காலை சற்று கனமழை பெய்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் 50 ஆயிரம் பேர் தங்க வைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு முகாம்கள் அமைத்துள்ளது.
இதனிடையே நேற்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழையளவு விபரம், ஈரோடு, பெருந்துறை தலா 6 மில்லிமீட்டர், கோபி 7.6, பவானிசாகர் 2.2, பவானி 8.6, கொடுமுடி 4.8, சென்னிமலை 3, மொடக்குறிச்சி, அம்மாபேட்டை தலா 4, கவுந்தப்பாடி 6.2, எலந்தைகுட்டைமேடு 5.4, வரட்டுப்பள்ளம் 3.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. மாவட்டத்தின் சராசரி மழையளவு 3.8 மில்லி மீட்டர் ஆகும். பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 95.41 அடியாகவும், அணைக்கான வரத்து 913 கன அடியாகவும் இருந்தது. பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து 1850 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது. மழையினால் மாவட்டத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
வ.உ.சி. பூங்கா ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா
கடந்த 3 மாதங்களில் குழந்தைகளுக்கு எதிராக 1,600 வழக்குகள் பதிவு
பல்வேறு வகையில் பிரசாரம் செய்தாலும் சட்டமன்ற உறுப்பினராக கூட கமல்ஹாசன் ஆக முடியாது
இடத்தை சமன் செய்ய வலியுறுத்தி 2வது நாளாக மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
பெருந்துறை தொகுதியில் ரூ.2.90 கோடியில் திட்டப்பணிகள்
ஈரோட்டில் தொடர் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்