நிவர் புயலால் மாவட்டத்தில் சாரல் மழை
11/27/2020 1:51:36 AM
ஈரோடு, நவ. 27: நிவர் புயல் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் சாரல் மழை பெய்தது.
தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் காலை வரை தொடர்ந்த லேசான சாரல் மழை பெய்து வருகின்றது. மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் நேற்று காலை சற்று கனமழை பெய்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் 50 ஆயிரம் பேர் தங்க வைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு முகாம்கள் அமைத்துள்ளது.
இதனிடையே நேற்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழையளவு விபரம், ஈரோடு, பெருந்துறை தலா 6 மில்லிமீட்டர், கோபி 7.6, பவானிசாகர் 2.2, பவானி 8.6, கொடுமுடி 4.8, சென்னிமலை 3, மொடக்குறிச்சி, அம்மாபேட்டை தலா 4, கவுந்தப்பாடி 6.2, எலந்தைகுட்டைமேடு 5.4, வரட்டுப்பள்ளம் 3.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. மாவட்டத்தின் சராசரி மழையளவு 3.8 மில்லி மீட்டர் ஆகும். பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 95.41 அடியாகவும், அணைக்கான வரத்து 913 கன அடியாகவும் இருந்தது. பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து 1850 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது. மழையினால் மாவட்டத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
மாநகரில் இன்று மின்தடை
மாவட்டத்தில் பொதுக்கூட்டம் நடத்தும் இடங்கள் அதிகரிப்பு
8 சட்டமன்ற தொகுதிகளிலும் பறக்கும் படை, நிலைக்கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு
கூடுதல் வாக்குசாவடி மையங்களில் அடிப்படை வசதி இல்லை
அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து விளக்கம்
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்
ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்