வந்தவாசியில் நெகிழ்ச்சி மனநலம் பாதித்த பெண்ணுக்கு புத்தாடை வழங்கிய பெண் போலீசார்
11/27/2020 12:34:38 AM
வந்தவாசி, நவ.27: வந்தவாசியில் மனநலம் பாதித்த பெண்ணுக்கு, பெண் போலீசார் புத்தாடை மற்றும் உணவு வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. இதையடுத்து, மழை பாதிப்பு விபரங்களை அறிய வந்தவாசி தெற்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் ெபண் காவலர்கள் கண்மணி, மணிமேகலை ஆகியோர் ரோந்து சென்றனர். அப்போது, காஞ்சிபுரம் சாலையில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம் அருகே மனநலம் பாதித்த லட்சுமி(55) என்ற பெண், கடுங்குளிரை தாங்க முடியாமல் உடல் நடுங்கி கொண்டிருந்தார். இதை கவனித்த பெண் காவலர்கள் உடனடியாக அருகில் உள்ள துணிக்கடைக்கு சென்று புடவை, போர்வை வாங்கி வந்து அந்த பெண்ணிற்கு அணிவித்தனர். உணவு பொட்டலமும் வாங்கி கொடுத்தனர். தனக்கு புடவை மற்றும் போர்வை வழங்கி ஆதரவு காட்டிய காவலர்களை அந்த பெண் மகிழ்ச்சியுடன் பார்த்தார். இந்த சம்பவம் அங்கிருந்த மக்களை ெநகிழ்ச்சியடைய செய்தது. தகவலறிந்த டிஎஸ்பி தங்கராமன், பெண் காவலர்களின் செயலை பெரிதும் பாராட்டினார்.
மேலும் செய்திகள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஆண்டு குண்டர் சட்டத்தில் 138 பேர் கைது
ஆதமங்கலம் கிராமத்தில் எருது விடும் விழா கோலாகலம் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு
அரசு இடத்தில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா: ஆர்டிஓ ஆய்வு
பெரணமல்லூர், செய்யாறு, தண்டராம்பட்டில் அனுமன் ஜெயந்தி சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் பங்கேற்பு
அருணை தமிழ்ச்சங்கம் சார்பில் இன்று 39 வார்டுகளில் கோலப்போட்டி எ.வ.வேலு தகவல்
கல்லூரி மாணவர்களுடன் காணொலியில் ஆலோசனை கலெக்டர் சந்தீப் நந்தூரி நடத்தினார் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்காக
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்