திருச்சியில் புயல், பேரிடரை சமாளிக்க தீயணைப்புத்துறையினருடன் போலீசார் 66 பேர் தயார்
11/25/2020 3:42:51 AM
திருச்சி, நவ. 25: தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியிருப்பதாலும், மேலும் தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக கனமழை ஏற்பட வாய்ப்புள்ளதால் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக திருச்சி மாநகரில் முன்னெச்சரிக்கையாக காவல்துறை சார்பில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாநகரில் தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்க தயாராக இருக்க பயிற்சி பெற்ற போலீசார், தீயணைப்புத் துறையினருடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை பேரிடர் காலத்தில் பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக 21 பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அடையாளம் காணப்பட்டு அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி கிழக்கு பகுதியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, யூடிசி உயர்நிலைப்பள்ளி, இஆர் உயர்நிலைப்பள்ளி, டிஎஸ்எம் மேல்நிலைப்பள்ளி, கார்மெல் மெட்ரிக் பள்ளி, சாரநாதன் பொறியியல் கல்லூரி ஆகிய 6 பள்ளி மற்றும் கல்லூரிகளும், திருச்சி மேற்கு பகுதியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, சேவா சங்கம் பள்ளி, கார்மெல் பள்ளி, தேசிய கல்லூரி, வெஸ்ட்லி பள்ளி, காவேரி மெட்ரி பள்ளி, பிஷப்ஹீபர் கல்லூரி, ஆர்சி பள்ளி, பிரான்சிஸ் மெட்ரிக் பள்ளி, கேஏபிவி பள்ளி, அரபிந்தோ பள்ளி, மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய 14 பள்ளி மற்றும் கல்லூரிகளும், திருச்சி ரங்கம் பகுதியில் அய்யனார் மாநகராட்சி ஆரம்ப பள்ளி ஆகிய இடங்கள் வருவாய்த்துறை மற்றும் மாநகராட்சி மூலம் தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் திருச்சி மாநகர கமிஷனர் லோகநாதன் தலைமையில், மாநகரில் பேரிடர் காலத்தில் பொதுமக்களின் நலனுக்காக பேரிடர் மேலாண்மை பயிற்சி முடித்த 66 போலீஸ் அதிகாரிகள் மற்றும் பெண் போலீஸ் உள்பட அனைவருக்கும் முறையான அறிவுரைகள் வழங்கப்பட்டு தகுந்த உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும் பேரிடர் மேலாண்மைக்கு தேவையான உபகரணங்கள் திருச்சி மாநகர், ஊர் காவல்படையினர் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினரிடமும் அடையாளம் காணப்பட்டு தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தினார். திருச்சி மாநகரில் புயல் சேதம், வெள்ள சேதம் மற்றும் பேரிடர் மேலாண்மைக்கென தனியாக கட்டுப்பாட்டு அறை திருச்சி மாநகர கமிஷனர் அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. 0431-233192 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு ஏதேனும் பாதிப்பு குறித்து தகவல் அளிக்கலாம். 96262-73399 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனவும் கூறினார்.
மேலும் செய்திகள்
திருச்சி மாவட்டத்தில் 506 பள்ளிகள் இன்று முதல் திறப்பு
வழிகாட்டுநெறிமுறைகளை கடைபிடிக்கா விட்டால் நடவடிக்கை ரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத்தேர் திருவிழாவுக்கு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி
நாளைய மின்தடை (காலை 9 மணி முதல் 5 மணி வரை)
முதியோர் இல்லத்தில் பொங்கல் விழா துப்பாக்கி தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரிக்கு ராணுவ விருது
27ம் தேதி தேரோட்டம் ஏர்போர்ட் அருகே ஆக்கிரமிப்பு அகற்றம் மாற்று இடம் வழங்ககோரி பாதிக்கப்பட்ட மக்கள் மனு
பேராசிரியர் பணியிடம் நிரப்ப பல்கலை கழகங்கள் ஒரு அலகு கணக்கீட்டை பின்பற்ற வேண்டும்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!