மெழுகுவர்த்திக்கு தட்டுப்பாடு புயல் முன்னெச்சரிக்கை பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் தவிப்பு வாடகை வாகனங்களில் சொந்த ஊர் சென்றனர்
11/25/2020 3:41:00 AM
திருவாரூர், நவ.25: திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டதன் காரணமாக பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நிவர் புயல் எச்சரிக்கை காரணமாக திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து என்பது நேற்று மதியம் ஒரு மணியுடன் நிறுத்தப்படுவதாக அரசு சார்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி மற்றும் நன்னிலம் ஆகிய 4 அரசு போக்குவரத்து கழக பணிமனையை சேர்ந்த 252 பேருந்துகளில் நேற்று மதியம் ஒரு மணி அளவில் 80 சதவீத பேருந்துகள் நிறுத்தப்பட்டன. அதன் பின்னர் படிப்படியாக மாலை 3 மணிக்குள் அனைத்து பேருந்துகளும் பணிமனைக்கு எடுத்துச் சென்று நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி மற்றும் நன்னிலம் பேருந்து நிலையங்களில் பொதுமக்கள் பேருந்திற்காக நீண்டநேரம் காத்திருந்த நிலையில் அரசு தெரிவித்தவாறு சரியான நேரத்தில் பேருந்துகளை நிறுத்தியதால் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்த பொதுமக்கள் அதன்பின்னர் வாடகை வாகனங்கள் மூலம் அவசர அவசரமாக தங்களது வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.
மேலும் செய்திகள்
திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் 36,000 ஏக்கரில் சம்பா தாளடி சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம்: குறுவை சாகுபடி அதிகரிப்பு
பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் அமல்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி
திருவாரூர் மாவட்டத்தில் நாளை நடக்கும் கிராம சபை கூட்டத்தில் வேளாண் அலுவலர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்
திருவாரூரில் இருந்து சேலத்திற்கு பொதுவிநியோக திட்டத்திற்கு 1,250 டன் அரிசி அனுப்பி வைப்பு
மக்களை காப்பதில் அக்கறை காட்டி பொதுசுகாதாரத்தில் அசத்தும் முத்துப்பேட்டை வட்டார மருத்துவத்துறை
மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் 10 ஆயிரம் பேர் பயன் திருவாரூர் மாவட்டத்தில் 82 ஆயிரம் குடிசை வீடுகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றப்படும் அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!