வேளாண் அதிகாரி அறிவுறுத்தல் திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் போது நடுவழியில் மாட்டி கொண்ட நரிக்குறவர்கள்
11/25/2020 3:36:48 AM
அறந்தாங்கி, நவ.25: திருச்சியில் இருந்து வியாபாரத்திற்கு ராமேஸ்வரம் செல்லும் போது நடுவழியில் மாட்டிக் கொண்ட நரிக்குறவர்களை ஆவுடையார் கோவில் போலீசார் மீட்டு பள்ளியில் தங்க வைத்தனர். திருச்சி பூலாங்குடி துப்பாக்கி தொழிற்சாலை அருகே வசித்து வந்த நரிக்குறவர்கள் இனத்தைச் சேர்ந்த 22 ஆண்கள், 18 பெண்கள், 13 குழந்தைகள் என 53 பேர் ராமேஸ்வரத்திற்கு ஊசி, பாசி விற்பனை செய்ய ஆவுடையார்கோவில் வழியாக சரக்கு ஆட்டோ, இருசக்கர வாகனங்களில் நேற்று சென்றனர். அவர்கள் ஆவுடையார்கோவில் அருகே வந்த போது நிவர் புயல் அறிவிப்பு காரணமாக திறக்கப்படாத ஆவுடையார் கோவில் பேருந்து நிலையத்திற்கு வந்து தங்கி இருந்தனர். அவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் தங்கி இருப்பது குறித்து தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் போலீசார் அவர்களை மீட்டு பாதுகாப்பான இடமான ஆவுடையார்கோவில் அடியார் குளம் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கூடத்தில்தங்க வைத்தனர். மேலும் போலீசார்அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடி தண்ணீர்ஏற்பாடுகள் செய்தனர்.
மேலும் செய்திகள்
ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 5 வீரர்கள் காயம்
முறையான காலமுறை ஊதியம் வழங்க கோரி அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டம்
அறந்தாங்கி அருகே எருக்கலக்கோட்டையில் பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சடலத்தை எடுக்காமல் போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் சமரசம்
புதுக்கோட்டை கைக்குறிச்சி வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் வகுப்புகள் துவக்கம்
கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கறம்பக்குடி ஒன்றிய அலுவலகம் முன்பு மாற்று திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
73 கிலோ கேக் வெட்டுதல்.. 73 லட்சம் மரக்கன்றுகள் நடுதல்.. மெழுகுசிலை அருங்காட்சியகம் : ஜெயலலிதா பிறந்த நாள் தடபுடலாக கொண்டாட்டம்!!
அமெரிக்காவில் பிரபல கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் சென்ற கார் விபத்தில் சிக்கியது..!!