நாகை மாவட்டத்தில் 11 விசைப்படகில் கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்ப நடவடிக்கை 24 மணி நேரம் பணியில் இருக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
11/25/2020 3:32:30 AM
நாகை,நவ.25: நாகை மாவட்டத்தில் இருந்து 11 விசைப்படகில் சென்ற 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 24 மணி நேரம் பணியில் இருக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனியநாதன் கூறினார். நிவர் புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் எடுத்துள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனியநாதன், கலெக்டர் பிரவீன்பிநாயர் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதன்படி நேற்று வேளாங்கண்ணி செபஸ்தியார் நகர், வேளாங்கண்ணி பஸ்ஸ்டாண்ட், பூக்காரத்தெரு, சுனாமி குடியிருப்பு ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அப்பகுதியில் மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதை தொடர்ந்து வேளாங்கண்ணியில் உள்ள பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையத்தை ஆய்வு செய்து தேவையான அனைத்து பொருட்களையும் கையிருப்பு வைத்திருக்க உத்தரவிட்டனர்.
இதன்பின்னர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனியநாதன் கூறியதாவது: நாகை மாவட்டத்தில் 24 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. புயல் பாதுகாப்பு மையங்கள், பல் நோக்கு மையங்கள் என 99 பாதுகாப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் விடுமுறை எடுக்காமல் 24 மணி நேரமும் பணியில் இருக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது. பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களுக்கு முககவசம், சானிடைசர் உள்ளிட்ட பொருட்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் போதுமான அளவிற்கு பொருட்கள் இருப்பு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை முகாம்களுக்கு செல்ல அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 11 விசைப்படகில் சென்ற 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் பாதுகாப்பாக கரை திரும்ப வசதி செய்யப்பட்டுள்ளது என்றார்.
மேலும் செய்திகள்
புனிதநீர் எடுத்து செல்லும் பக்தர்கள் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி
கஜா புயல் பாதிப்பு நிவாரணம் இன்னும் வழங்காததை கண்டித்து சிறு, குறுந்தொழில் சங்கம் உண்ணாவிரதம்
திருக்குவளை அங்காள பரமேஸ்வரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கீழ்வேளூர், ஜன. 26: திருக்குவளை அங்காள பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
நாகை கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் தினம் கொண்டாட்டம் போட்டிகளில் வென்றோருக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கல்
ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் ரூ.150 கோடியில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்க பூமிபூஜை
தஞ்சை- நாகை தேசிய நெடுஞ்சாலையை செப்பனிடக்கோரி சிக்கல் பகுதியில் மறியல் போராட்டம்
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்