கலெக்டர் அறிவிப்பு நகராட்சி பகுதியில் நிறம் மாறி வரும் குடிநீரால் மக்கள் அவதி
11/25/2020 3:30:42 AM
கரூர், நவ. 25: கரூர் நகரப்பகுதிகளில் விநியோகம் செய்யப்படும் குடிநீர் நிறம் மாறி வருவதால் மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த வாரம் மேலடுக்கு சுழற்சி காரணமாக தொடர்ந்து மூன்று நாட்கள் கரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கரூர் நகராட்சி பகுதிகளின் குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு விநியோகம் செய்யப்பட்டு வரும் தண்ணீர், சில பகுதிகளில் மண் கலந்து, மாசுடன் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே இதனை பயன்படுத்த முடியாமல் பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள இந்த சமயத்தில் மக்கள் பயன்பாட்டிற்காக விடப்படும் குடிநீர் சுத்தமான முறையில் விநியோகம் செய்ய தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரூர் கமிஷன் மண்டியில் பூவன் ரக பழங்கள் கூடுதல் விலைக்கு ஏலம்
ஆலய வழிபாட்டு பயிற்சி முகாமில் கிராம கோயில் பூசாரிகளுக்கு வாய்ப்பு ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல்
அரவக்குறிச்சியில் கட்டுமான தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கல்
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கரூர் கோயில்களில் சிறப்பு வழிபாடு
கரூர் மாவட்டத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை கலெக்டர் அறிவிப்பு
தாந்தோணிமலை அருகே சிறுமியிடம் நகை பறிப்பு மர்ம நபர்களுக்கு வலை
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்
பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!
13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்