வேலை இல்லாத விரக்தியால் டெய்லர் தூக்கிட்டு தற்கொலை
11/25/2020 3:19:32 AM
திருப்பூர், நவ.25: திருப்பூரில் வேலை இல்லாத விரக்தியால் டெய்லர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடலூர் மாவட்டம், தோட்டம்குப்பத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (34). இவர், திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் கடந்த 6 ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வந்தார். அதே பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடந்த 2 மாதமாக இவருக்கு சரிவர வேலை இல்லை. இதனால், கடுமையான மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த வாரம் தனது மனைவி, மகளை ஊருக்கு அனுப்பிவிட்டு தனிமையில் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 22ம் தேதி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அருகில் உள்ளவர்கள் வீரபாண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
10 மாதங்களுக்குப் பிறகு மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு
பல்லடத்தில் 43 பேர் மாயமான வழக்குகளுக்கு ஓராண்டில் தீர்வு
மாநகரில் இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம்
வியாபாரி போல் நடக்கும் பருத்தி கழகம்
திருப்பூர் தெற்கு போலீசாரின் மனித உரிமை மீறலை கண்டித்து பல்வேறு கட்சியினர் கமிஷனரிடம் மனு
சாக்கடை கழிவு நீரால் சுகாதாரசீர் கேடு
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!