மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
11/25/2020 1:37:43 AM
மரக்காணம், நவ. 25:விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை மரக்காணம் பேரூராட்சிக்குட்பட்ட அழகன்குப்பம் மீனவர் கிராமத்திற்கு சென்று அப்பகுதி பொதுமக்களை நேரடியாக பார்வையிட்டு அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது நிவர் புயலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள மீனவர்கள் பாதுகாப்பான புயல் பாதுகாப்பு மையங்களில் தங்கவேண்டும் என்று கூறி புயல் குறித்து மீனவர்களிடம் விழிப்புணர்வு ஏற்பத்தினார். அங்கிருந்து மற்ற மீனவர் கிராமத்திற்கு செல்ல மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை சென்றார். அப்போது மரக்காணம் அருகே முட்டுக்காடு காலனியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலையில் வந்து மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை வந்த வாகனத்தை வழிமறித்து நின்றனர். இதனை பார்த்த மாவட்ட ஆட்சியர் வாகனத்தில் இருந்து கீழே இறங்கி உங்களுக்கு என்ன பிரச்னை என்று கேட்டார். அப்போது மாவட்ட ஆட்சியரை முற்றுக்கையிட்ட முட்டுக்காடு காலனி பொதுமக்கள் எங்கள் கிராமம் கடற்கரையையொட்டி உள்ளது. இதனால் புயல் தாக்கினால் எங்களுக்கு சேதம் அதிகம் உண்டாகும். ஆனால் இதுவரையில் எங்களை பாதுகாக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபோல் ஒவ்வொரு இயற்கை பேரிடரின்போதும் எங்களை அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அத்திப்பட்டி கிராமம் போல் விட்டு விடுகின்றனர் என்று கூறினர்.உடனே மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அவர்களது கிராமத்திற்கு சென்று பார்வையிட்டார். மேலும் இப்பகுதி பொதுமக்களை பாதுகாப்பாக தங்கவைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் செய்திகள்
தடுப்பணையை உடைத்து தென்பெண்ணை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவனின் உடல் மீட்பு
பைக்கில் கடத்திய 80 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
பைக் விபத்தில் வாலிபர் பலி
மேல்மலையனூர் கோயில் உண்டியல் காணிக்கை ₹42 லட்சம்
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்
வாலிபரை தாக்கிய 2 பேர் கைது
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!