புதிய காருக்கு ஆசி வழங்க வேண்டும் என்று நள்ளிரவில் அழைத்தனர் பாதிரியாரை கட்டிப்போட்டு 9 லட்சம், 4 சவரன் நகை கொள்ளை வேலூரில் 4 பேர் கும்பல் துணிகரம்
11/25/2020 1:29:43 AM
வேலூர், நவ.25: வேலூரில் ஆசி கேட்டு வந்ததாக கூறி, 4 பேர் கும்பல் பாதிரியாரை தாக்கி, கட்டிப்போட்டு ₹9 லட்சம் ரொக்கம் மற்றும் 4 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் சத்துவாச்சாரி வள்ளலாரில் செயல்படும் ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள செயின்ட் ஜோசப் சர்ச்சின் பாதிரியார் மலையப்பன்(60). இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில், சர்ச்சில் உள்ள அவரது அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது அறையின் ஜன்னல் கதவை 4 பேர் கொண்ட கும்பல் தட்டியுள்ளது. இதனால் ஜன்னலை திறந்த பாதிரியாரிடம், ‘நாங்கள் புதிய கார் வாங்கியிருக்கிறோம். அதற்கு ஆசி வழங்க வேண்டும்’ என்று கூறி அவரை அழைத்துள்ளனர். இதை நம்பிய பாதிரியார் கதவை திறந்தார். அப்போது திடீரென கத்தியை காட்டி மிரட்டிய கும்பல், அவரது நெற்றிப்பொட்டில் பலமாக தாக்கியது. மேலும் அவரை அறைக்குள் தள்ளிச் சென்று அங்குள்ள நாற்காலியில் கட்டிப்போட்டனர்.
பின்னர் அந்த அறையின் பீரோவை திறந்து அதில் இருந்த ₹9 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 4 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளது. நெற்றியில் காயமடைந்த பாதிரியார் மலையப்பன், கட்டுகளை அவிழ்த்துக் கொண்டு சத்துவாச்சாரி காவல்நிலையம் சென்று சம்பவம் குறித்து புகார் அளித்தார். புகாரை பெற்ற சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து பாதிரியாரிடம் பணம், நகை கொள்ளையடித்து சென்ற 4 பேர் கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் சத்துவாச்சாரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
150 இளம் வாக்காளர்கள், 18 மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பு சிறப்பு முகாமை கலெக்டர் தொடங்கி வைத்தார் வேலூர் மாவட்டத்தில்
பொன்னையிலும் பறவைக்காய்ச்சல் பீதி பறவைகள் செத்து மடிவதால் பரபரப்பு ஆற்காட்டை தொடர்ந்து
குடியரசு தின கிராம சபா கூட்டம் ரத்து கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவு
இலவச செல்போன் வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் வேலூரில் பரபரப்பு பார்வையற்ற, செவித்திறன் குறைந்த அனைவருக்கும்
போலி அறக்கட்டளையை நம்பி குவிந்த மாற்றுத்திறனாளிகள்
திமுக அரசு அமைந்தால்தான் மக்களுக்கு பாதுகாப்பு வேலூரில் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி: மத்திய அரசின் எடுபிடி அதிமுகவை அகற்ற வேண்டும்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!