மீஞ்சூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச இளம்பெண் கைது
11/25/2020 1:27:30 AM
பொன்னேரி: மீஞ்சூரில் உரிய ஆவணங்களின்றி சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். மீஞ்சூரில், வங்கதேசத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக சிபிசிஐடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, காஞ்சிபுரம் சிபிசிஐடி போலீசார் மீஞ்சூரில் தங்கியிருந்த இளம் பெண்ணை பிடித்தனர். விசாரணையில், அவரது பெயர் பப்பியா கோஷ் என்பது தெரியவந்தது. மேலும், அவரிடம் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. சட்டவிரோதமாக தங்கியிருந்த அந்த பெண்ணை மீஞ்சூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மீஞ்சூர் போலீசார் அவரை கைது செய்து நடத்திய விசாரணையில், வங்கதேசத்தை சேர்ந்த பப்பியா கோஷ் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒரு வாலிபரை முகநூலில் பழகி காதலித்து இந்தியா வந்து அந்த வாலிபரை பதிவு திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து, சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் ஊடுருவி ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து மீஞ்சூரில் அவர் ஏன் தங்கினார் என்பது குறித்து வங்கதேச இளம்பெண்ணிடம் தீவிரமாக விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
அனுமன் ஜெயந்தி விழா
ஏரியில் மூழ்கி மீனவர் பலி
சாலை விரிவாக்க பணிக்கு விவசாய நிலம் கையகப்படுத்துவதை நிறுத்தகோரி கலெக்டரிடம் திமுக மனு
சமத்துவ பொங்கல் விழா
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு: எஸ்பி அரவிந்தன் தகவல்
சுடுகாட்டிற்கு செல்ல வழியில்லாததால் சடலத்துடன் மக்கள் சாலை மறியல்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்