மின்வேலியில் சிக்கி தொழிலாளி பலியான வழக்கில் நில உரிமையாளருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை
11/24/2020 3:58:00 AM
திருவள்ளூர்: பொதட்டூர்பேட்டை கோணசமுத்திரம் முனிநாயுடு பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி(69). இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இரவு நேரத்தில் காட்டுப்பன்றிகள் உள்ளே புகுந்து நாசம் செய்துவிடுவதால் வேலி அமைத்து அதில் சட்டவிரோதமாக மின்சாரம் பாய்ச்சியுள்ளார். இதை அறியாத சுப்பிரமணியத்திடம் பணியாற்றி வந்த விவசாய கூலியான அதே பகுதியை சேர்ந்த சஞ்சீவி(47) என்பவர் கடந்த 2015ம் ஆண்டு நெல் மூட்டைகளை எடுப்பதற்காக அந்த வேலியை தாண்டி சென்றபோது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
வீடு திரும்பாததால் அவரது மகன் சின்னதம்பி அங்கு சென்று பார்த்தபோது சஞ்சீவி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின்பேரில் பொதட்டூர்பேட்டை போலீசார் சுப்பிரமணியை கைது செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் மாவட்ட அரசு வழக்கறிஞர் வி.ஆர்.ராம்குமார் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கை நேற்று விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி செல்வநாதன், சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த சுப்பிரமணிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
மேலும் செய்திகள்
அனுமன் ஜெயந்தி விழா
ஏரியில் மூழ்கி மீனவர் பலி
சாலை விரிவாக்க பணிக்கு விவசாய நிலம் கையகப்படுத்துவதை நிறுத்தகோரி கலெக்டரிடம் திமுக மனு
சமத்துவ பொங்கல் விழா
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு: எஸ்பி அரவிந்தன் தகவல்
சுடுகாட்டிற்கு செல்ல வழியில்லாததால் சடலத்துடன் மக்கள் சாலை மறியல்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்