பொது வேலை நிறுத்தத்தை விளக்கி பிரசார இயக்கம்
11/24/2020 3:50:44 AM
தஞ்சை, நவ. 24: வரும் 26ம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடக்கிறது. இதை விளக்கி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் தர்மராஜ் முன்னிலையில் அம்மாப்பேட்டை ஒன்றியத்தில் பிரசார இயக்கம் நடந்து வருகிறது. இதில் புதிய வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளின் உரிமைகள் முழுமையாக பறிக்கப்படுகிறது. விளை பொருட்களுக்கு நியாயமான விலைக்கு உத்தரவாதம் இல்லை. நெல் கொள்முதல் கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுகிறது. கட்டுப்பாடற்ற மின்கட்டணம் உயர்வுக்கு வழி வகுத்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மக்கள் சேவை புறக்கணிக்கப்படுவது குறித்து விளக்கி பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. விவசாய சங்க ஒன்றிய செயலாளர் சோமு, இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும் செய்திகள்
புதிய வேளாண் சட்டம் ரத்து கோரி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அம்மாப்பேட்டை வட்டாரத்தில் நெற்பயிர்கள் பாதிப்பு கணக்கெடுப்பு பணி முறையாக நடக்கிறதா?
துணை இயக்குநர் ஆய்வு ரூபாய் நோட்டுகளில் நேதாஜி உருவபடம் இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்
குடியரசுதின அணிவகுப்பு ஒத்திகை திருக்காட்டுப்பள்ளி முருகன் கோயிலில் தை கிருத்திகை விழா
தஞ்சையில் நாளை தம்பி விலாஸ் உணவகத்தை ஜி.கே.வாசன் எம்பி திறக்கிறார்
அனைத்து தியாகிகளுக்கும் மத்திய அரசின் பென்சன் வழங்க வலியுறுத்தல்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்