வாக்காளர் சிறப்பு முகாம் 9,115 பேர் விண்ணப்பம்
11/24/2020 3:17:22 AM
ஊட்டி, நவ. 24:நீலகிரி மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இரு நாட்கள் நடந்த சிறப்பு முகாமில் 9,115 பேர் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் செய்ய விண்ணப்பம் அளித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 16ம் தேதி வெளியிடப்பட்டது. 18 வயது பூர்த்தியடைந்த நபர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம். மேலும் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்குதல், பிழை திருத்தங்கள் மற்றும் முகவரி மாற்றங்கள் போன்றவற்றிற்கும் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக நீலகிரியில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள அனைத்து வாக்குசாவடிகளிலும் கடந்த 21, 22 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடந்தது. இதில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்று பெயர் சேர்ப்பிற்கு விண்ணப்பம் அளித்தனர்.
இதுதவிர பலர் பெயர் நீக்கம் மற்றும் திருத்தம் செய்தல், முகவரி மாற்றங்கள் மேற்கொள்ளுதல் போன்றவற்றிற்கு விண்ணப்பம் அளித்தனர். கடந்த சனிக்கிழமையன்று நடந்த சிறப்பு முகாமில் 3 தொகுதிகளிலும் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 2,765 பேர் படிவம் 6ல் விண்ணப்பித்தனர். பெயர் நீக்கத்திற்கு படிவம் 7ல் 210 பேரும், திருத்தம் செய்ய படிவம் 8ல் 323 பேரும், முகவரி மாற்றம் செய்ய படிவம் 8ஏ.,வில் 133 பேர் என மொத்தம் 3,431 பேர் விண்ணப்பித்தனர். மேலும் ஞாயிற்றுகிழமை நடந்த முகாமில் பெயர் சேர்க்க 4,435 பேரும், நீக்கத்திற்கு 260 பேரும், திருத்தம் செய்ய 583 பேரும், முகவரி மாற்றத்திற்கு 406 பேர் என மொத்தம் 5,684 பேர் விண்ணப்பித்தனர். 2 நாட்களில் மொத்தம் 9,115 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 7200 பேர் பெயர் சேர்ப்பிற்கு மட்டும் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் 12,13 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடக்க உள்ளது.
மேலும் செய்திகள்
10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது
விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்க ஊட்டி நீதிமன்றம் உத்தரவு
அணைகள் நிரம்பியுள்ளதால் கோடையில் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது
பயிர் உற்பத்தி திறனை மேம்படுத்த 5 நாள் இணையவழி கருத்தரங்கு துவங்கியது
மாற்றுப்பாதையான ஊட்டி - தலைகுந்தா சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
நீலகிரி மாவட்டத்தில் ஒன்பது மாதங்களுக்கு பிறகு இன்று 218 பள்ளிகள் திறப்பு
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!