வேலூரில் பரபரப்பு உதயநிதி ஸ்டாலின் கைது கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 50 பேர் கைது
11/23/2020 2:55:26 AM
வேலூர், நவ.23: திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற தலைப்பில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருக்குவளையில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து 3வது நாளான நேற்று நாகை மாவட்டம் குத்தாலத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். இதையடுத்து போலீசார் உதயநிதியை கைது செய்தனர். இந்த தகவலை அறிந்த வேலூர் மாவட்ட திமுக இளைஞரணியினர் நேற்று மாலை சுமார் 3.30 மணியளவில் வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ராஜ மார்த்தாண்டன் தலைமையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட திமுக இளைஞரணியினர் 50 பேரை கைது செய்து வேலூர் கொணவட்டம் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலை 5 மணியளவில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் கிரீன் சர்க்கிள் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகள்
எருது விடும் விழா கோலாகலம் டெல்லி குழுவினர் ஆய்வு அணைக்கட்டு அருகே 2 கிராமங்களில்
தேசிய அளவில் பதக்கம் வென்ற 43 பேருக்கு ₹1.68 லட்சம் ஊக்கத்தொகை வேலூர் மாவட்டத்தில் 2018-19ம் ஆண்டில்
தவில் வித்வான் மயங்கி விழுந்து சாவு கே.வி.குப்பம் அருகே திருமண நிகழ்ச்சியில்
வேலூர் அருகே கலெக்டர் அலுவலக ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு அடுத்தடுத்த சம்பவங்களால் மக்கள் பீதி
கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்க ₹18.17 கோடி நிதி ஒதுக்கீடு அரசு முதன்மை செயலாளர் உத்தரவுஅரசு கலை மற்றும் அறியவில் கல்லூரிகளில் பணியாற்றும்
மாடு விடும் விழாவில் போலீஸ் தடியடி 3 இடங்களில் காளைகள் முட்டி 48 பேர் படுகாயம் காட்பாடி அருகே பரபரப்பு
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!