வீட்டின் கதவு உடைத்து 10 சவரன் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலை குடியாத்தத்தில் துணிகரம்
11/23/2020 2:55:19 AM
குடியாத்தம், நவ.23: குடியாத்தத்தில் இந்து முன்னணி நிர்வாகி நிர்வாகி வீட்டில் 10 சவரன் நகையை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
குடியாத்தம் பிச்சனூர்பேட்டையை ேசர்ந்தவர் மகேஷ், இந்து முன்னணி மாவட்ட செயலாளர். இவர் நேற்றுமுன்தினம் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். பின்னர் நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பின்பக்க கதவு உடைத்து திறக்கப்பட்டிருந்தது மகேஷூக்கு தெரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்றுபார்த்தார். அப்போது, அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 10 சவரன் தங்க நகைகள் மற்றும் ₹10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, மகேஷ் குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் வழக்குப்பதிந்து மர்ம ஆசாமிகளை தேடிவருகின்றனர்.
மேலும் செய்திகள்
எருது விடும் விழா கோலாகலம் டெல்லி குழுவினர் ஆய்வு அணைக்கட்டு அருகே 2 கிராமங்களில்
தேசிய அளவில் பதக்கம் வென்ற 43 பேருக்கு ₹1.68 லட்சம் ஊக்கத்தொகை வேலூர் மாவட்டத்தில் 2018-19ம் ஆண்டில்
தவில் வித்வான் மயங்கி விழுந்து சாவு கே.வி.குப்பம் அருகே திருமண நிகழ்ச்சியில்
வேலூர் அருகே கலெக்டர் அலுவலக ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு அடுத்தடுத்த சம்பவங்களால் மக்கள் பீதி
கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்க ₹18.17 கோடி நிதி ஒதுக்கீடு அரசு முதன்மை செயலாளர் உத்தரவுஅரசு கலை மற்றும் அறியவில் கல்லூரிகளில் பணியாற்றும்
மாடு விடும் விழாவில் போலீஸ் தடியடி 3 இடங்களில் காளைகள் முட்டி 48 பேர் படுகாயம் காட்பாடி அருகே பரபரப்பு
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!