திருச்செங்கோடு அருகே தீயில் கருகிய மாணவி சிகிச்சை பலனின்றி சாவு
11/23/2020 2:50:33 AM
திருச்செங்கோடு, நவ.23: திருச்செங்கோடு அருகே, சமையல் செய்த போது தீப்பற்றி காயடைந்த பள்ளி மாணவி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். திருச்செங்கோடு அருகேயுள்ள சின்னமணலியை சேர்ந்தவர் ரம்யா. கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் இவரது மகள் அர்ச்சனா பிரியா(14), அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மாதம் 12ம்தேதி, வீட்டில் சமையல் செய்ய அடுப்பு பற்றவைத்த போது, எதிர்பாராத விதமாக அவரது ஆடையில் தீப்பற்றிக்கொண்டது. அலறல் சத்தம் கேட்டு வந்த ரம்யா மற்றும் அக்கம்பக்கத்தினர், அர்ச்சனா பிரியாவை மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக மாணவியை சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி, நேற்று சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து எலச்சிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
ஆன்லைன் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
விவசாயிகள் குறைதீர் கூட்டம்; நாளை நடக்கிறது
மது விற்ற வாலிபர் கைது
ஸ்டூடியோவில் கேமரா திருட்டு
மனைவியை தற்கொலைக்கு தூண்டியவருக்கு 5 ஆண்டு சிறை
திமுகவில் இணைந்த அதிமுக பிரமுகர்
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!