வெண்டிபாளையம் ரயில்வே கேட்டில் சப்வே கட்டுமான பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
11/23/2020 1:54:34 AM
ஈரோடு, நவ. 23: ஈரோடு வெண்டிபாளையம் ரயில்வே கேட்டில் சப்-வே கட்டுமான பணிகள் விரைந்து முடிக்க அப்பகுதி பொதுமக்கள் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு பழைய கரூர் ரோட்டில் வெண்டிபாளையம் செல்லும் வழியில் இரண்டு ரயில்வே கிராசிங்குகள்(ரயில்வே கேட்) உள்ளன. இந்த கிராசிங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் வெண்டிபாளையம், மோளகவுண்டன்பாளையம், லோகநாதபுரம் உள்ளிட்ட கிராமங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில், வெண்டிபாளையம் ரயில்வே கிராசிங்குகளின் வழியாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடந்து செல்ல வசதியாக சப்-வே (நுழைவு பாலம்) கட்டுமான பணி கடந்த ஆண்டு துவங்கப்பட்டு,
அப்பகுதியில் சாலை போக்குவரத்துக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், வெண்டிபாளையம், மோளகவுண்டன் பாளையத்தில் வசிக்கும் மக்கள் தினந்தோறும் 3 கி.மீட்டர் தூரம் சுற்றி தங்களது வேலைகளுக்கு சென்று வருகின்றனர். சப்வே கட்டுமான பணி மந்தமாக நடந்து வருவதால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பணியை விரைந்து முடித்து, சாலை போக்குவரத்து துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
ராகுல்காந்தி இன்று ஈரோடு மாவட்டம் வருகை
ஈரோட்டில் 27 பேருக்கு கொரோனா
சாலை விரிவாக்க பணிக்காக வீடுகள் இடித்து அகற்றம்
மாவட்டத்தில் 13 மையங்களில் இன்று ஊரக திறனாய்வு தேர்வு
அந்தியூரில் வி.சி.க. சார்பில் வேளாண் சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
பெருந்துறை தொகுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்