உதவியாளர், எழுத்தர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு
11/23/2020 1:54:27 AM
ஈரோடு, நவ. 23: ஈரோட்டில் மத்திய கூட்டுறவு துறையில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் எழுத்தர் பணியிடங்களுக்கு நடந்த எழுத்து தேர்வில் 756 பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். ஈரோடு மாவட்ட கூட்டுறவுத்துறையின் மாவட்ட ஆள்சேர்ப்பு துறை மூலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 73 உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வுக்கு 1,044 பேர் விண்ணப்பித்திருந்தனர். இப்பதவிக்கான எழுத்து தேர்வு ஈரோட்டில் 3 மையங்களில் நேற்று முன்தினம் நடந்தது. தேர்வில் 468 பேர் ஆப்சென்ட் ஆகி, 576 பேர் மட்டுமே தேர்வினை எழுதினர். இதேபோல், பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக 62 உதவியாளர் மற்றும் எழுத்தர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு 2 மையங்களில் நேற்று நடந்தது.
இத்தேர்வுனை எழுத விண்ணப்பித்திருந்த 779 பேரில், 491 பேர் மட்டுமே பங்கேற்று தேர்வினை எழுதினர். இந்த எழுத்து தேர்வு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளையும் கடைபிடித்து சமூக இடைவெளியுடன் நடந்ததாகவும், இந்த இரண்டு நாள் தேர்வுகளிலும் மொத்தம் 756 பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
ராகுல்காந்தி இன்று ஈரோடு மாவட்டம் வருகை
ஈரோட்டில் 27 பேருக்கு கொரோனா
சாலை விரிவாக்க பணிக்காக வீடுகள் இடித்து அகற்றம்
மாவட்டத்தில் 13 மையங்களில் இன்று ஊரக திறனாய்வு தேர்வு
அந்தியூரில் வி.சி.க. சார்பில் வேளாண் சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
பெருந்துறை தொகுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்