போலீசாருக்கு சுழற்சி முறையில் விடுமுறை
11/22/2020 7:30:04 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட போலீசாருக்கு பணிச்சுமை அதிகம் இருப்பதாகவும், அவர்களுக்கு உரிய முறையில் விடுமுறை வழங்கப்படுவதில்லை எனவும் நீண்ட காலமாக புகார்கள் இருந்து வருகின்றன. அதிலும் தற்போது கொரோனா பரவல் காலத்தில் போலீசாருக்கு பணிச்சுமை அதிகரித்தது மட்டுமல்லாமல், ஓய்வின்றி தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பணியாற்றும் 982 போலீசாருக்கு வாரத்துக்கு ஒரு நாள் விடுமுறை வழங்கவேண்டும் என தமிழக காவல்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
அந்த வகையில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் முதற்கட்டமாக நேற்று 125 காவலர்களுக்கு ஒரு நாள் ஓய்வு அளித்து உத்தரவிட்டுள்ளார், தொடர்ந்து சுழற்சி முறையில் மற்ற அனைத்து காவலர்களுக்கும் ஒரு நாள் வார விடுப்பு வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மேலும் செய்திகள்
கரும்பு தோட்டத்தில் தீ 9 ஏக்கர் நாசம்
மாவட்ட எல்லைகளில் தீவிர வாகன சோதனை
போக்சோவில் டிரைவர் கைது
சொகுசு கார் திருட்டு
லாரி மோதி அதிகாரி பலி
ரயில் மோதி வெல்டர் பலி
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்