தேனி முருகன் கோயில்களில் திருக்கல்யாண விழா
11/22/2020 3:11:42 AM
தேனி, நவ. 22: தமிழ் கடவுளான முருகனுக்கு ஏற்ற மாதமாக கார்த்திகை மாதம் கொண்டாடப்படுகிறது . ஐப்பசி மாதம் 30ம் நாள் தொடங்கி கார்த்திகை மாதம் ஆறாம் நாள் வரை கந்தசஷ்டி திருவிழா சூரசம்காரம் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் உள்ளிட்ட விழாக்கள் முருகன் கோயில்களில் நடத்தப்படுவது வழக்கம். தேனி நகர் மதுரை ரோட்டில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் வளாகத்தில் நேற்று முன்தினம் மாலை சூரசம்ஹாரவிழா நடந்தது. இதில் முருகன் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து பெண் பக்தர்கள் பால்குடம் ஏந்தியும், மாவிளக்கு எடுத்தும் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டனர். இக்கோயிலில் நேற்று விநாயகர் பூஜையுடன் சுப்ரமணிய சுவாமிக்கு வள்ளி, தெய்வானையுடன் திருக்கல்யாணம் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல தேனி என்ஆர்டி நகரில் உள்ள கணேச கந்தபெருமாள் கோயிலிலும் நேற்று திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
மேலும் செய்திகள்
குடியரசு தின விழா கோலாகல கொண்டாட்டம்
உத்தமபாளையம் தாலுகாவில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை நிறுத்தம்
மதுரைக்கு மாற்று தண்ணீர் திட்டம் கோரி கூடலூரில் கவன ஈர்ப்பு பேரணி
10 மாதங்களுக்கு பின் சுருளி அருவி திறப்பு குளிக்க தடை நீடிப்பால் ஏமாற்றம்
மானிய விலை சிமென்ட் கிடைப்பதில் சிக்கல் பாதியில் நிற்கும் கட்டிட பணிகள்
சின்னமனூர் அருகே புதிய பாலம் கட்டும் பணி தீவிரம்
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!