தேனி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை பாதுகாப்பது எப்படி? வேளாண் இணை இயக்குநர் ஆலோசனை
11/22/2020 3:11:33 AM
தேனி, நவ. 22: தேனி மாவ ட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் முல்லை பெரியாறு பாசன பகுதி, பிடிஆர், கால்வாய் பாசன பகுதி, சோத்துப்பாறை பாசன பகுதி, மஞ்சளாறு அணை பாசன பகுதிகளில் உள்ள 20 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நெல் வயல்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. நீரை வெளியேற்றி பயிர்களை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து தேனி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அழகுநாகேந்திரன் அறிவுரை வழங்கி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: நெல் வயல்களில் தண்ணீர் தேங்கினால் துத்தநாகம், தழைச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டு பயிர்கள் மஞ்சள் மற்றும் பழுப்பு நிறமாக மாற வாய்ப்புள்ளது.
எனவே வயல்களில் உள்ள தண்ணீரை வெளியேற்றி விட்டு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் இரண்டு கிலோ யூரியா, ஒரு கிலோ துத்தநாக சல்பேட் கலந்து கைத்தெளிப்பான் மூலம் இலைகளின் மீது தெளிக்க வேண்டும். ஊட்டச்சத்து பற்றாக்குறையை சரி செய்ய ஏக்கருக்கு 50 கிலோ அம்மோனியம் சல்பேட், 22 கிலோ யூரியா, 15 கிலோ ஜிப்சம், 4 கிலோ வேப்பம்புண்ணாக்கு கலந்து இரவு முழுவதும் வைத்திருந்து மறுநாள் காலை 17 கிலோ பொட்டாஷ் உரத்தை கலந்து இட வேண்டும். 15 நாளுக்கு மேற்பட்ட இளம் நாற்றுக்களை இடைவெளி அதிகம் உள்ள இடங்களில் நடவு செய்து நிரப்ப வேண்டும்.
30 நாள் வரை ஆன பயிர்களில் அதிக துார் உள்ள நாற்றுக்களை பிரித்து நடவு செய்ய வேண்டும். சூடோமோனஸ் புளூசரன்ஸ் இடுவதன் மூலம் நோய்கள் வராமல் தடுத்து விடலாம். இந்த பணிகளை விவசாயிகள் விரைவாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மழை வெள்ளம் சூழ்ந்துள்ள நெற்பயிர்களை நோய் தாக்காமல் பாதுகாத்து அதிக விளைச்சல் எடுக்கலாம்.
மேலும் செய்திகள்
வங்கி கடன் வாங்கி தருவதாக 5.50 லட்ச ரூபாய் மோசடி ஈரோடு வாலிபர் கைது
தேனியில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு விருது
சின்னமனூரில் திறந்தவெளி கழிப்பிடமான பயணிகள் நிழற்குடைகள் நடவடிக்கை எடுக்குமா நகராட்சி?
டூவீலர் விபத்தில் கொத்தனார் சாவு
கம்பம் சேனை ஓடையில் கொட்டும் குப்பையால் தேங்கும் கழிவுநீர் அகற்ற கோரிக்கை
உத்தமபாளையத்தில் அன்றாடம் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வாகனங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்