தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் மீது குண்டாஸ்
11/22/2020 1:59:56 AM
ஈரோடு, நவ. 22: ஈரோட்டில் தொடர் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு டவுன், மொடக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொடர் திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக கடந்த மாதம் ஈரோடு மரப்பாலம் ஆலமரத்து தெருவை சேர்ந்த ஜானி மகன் பாபு ராஜ் (எ) பாபு (24), வெண்டிபாளையம் பாலதண்டாயுதபாணி வீதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் கண்ணன் (31), லக்காபுரம் சாணார் மேடு மாணிக்கம் மகன் பிரபாகரன் (எ) பூபதி (29) ஆகியோரை
போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இவர்கள் மீது ஈரோடு டவுன் போலீஸ் சப்-டிவிசனுக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் 8க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்கள் மூவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க ஈரோடு எஸ்பி. தங்கதுரை, கலெக்டர் கதிரவனுக்கு பரிந்துரைத்தார். இதன்பேரில், பாபு, கண்ணன், பிரபாகரன் ஆகிய மூவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் கதிரவன் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
இதையடுத்து, ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூவரிடமும், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட போலீசார் மூலம் நேற்று தகவல் தெரிவிக்கப்பட்டது. இதேபோல், நடப்பாண்டு இதுவரை தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக 21 பேர், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தியதாக 11 பேர் என 32 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக, ஈரோடு எஸ்பி. தங்கதுரை தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
கெட்டிசமுத்திரத்தில் குப்பை வண்டிகளை சிறை பிடித்த மக்கள்
19 பேருக்கு கொரோனா இரு பெண்கள் பலி
ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்
ரயில் நிலையத்தில் தொடர்ந்து 6 முறை ஒலித்த சைரனால் பரபரப்பு
ஈரோடு டிஆர்ஓ இடமாற்றம்
சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!