சேலத்தில் நாளை வீரபாண்டி ஆறுமுகம் நினைவுநாள் அனுசரிப்பு வீரபாண்டி ராஜா அறிக்கை
11/22/2020 1:58:28 AM
சேலம், நவ.22: சேலத்தில் நாளை, வீரபாண்டி ஆறுமுகம் நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது. இதுகுறித்து,திமுக தலைமை தேர்தல் பணிக்குழு செயலாளர் வீரபாண்டி ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக முன்னாள் அமைச்சரும், சேலம் மாவட்ட முன்னாள் செயலாளருமான வீரபாண்டி ஆறுமுகம் மறைந்து 8 ஆண்டுகள் நிறைவடைந்தன. அவர் ஏழை எளிய,பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் அனைத்து தரப்பு மக்களின் மேன்மையை தனது லட்சியமாகவும், கனவாகவும், எண்ணமாகவும் கொண்டு அவற்றை நிறைவேற்ற அரும்பாடு பட்டார். அவரது நினைவு நாள் நாளை (23ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அவரது நினைவிடத்தில் அன்று காலை 8 மணியளவில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கட்சி தோழர்கள், தலைவர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
சேலம் மாவட்டத்தில் 4 நாளில் 3,016 பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி
25,000 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
அறிவிக்கப்படாத மின்வெட்டு
ஏகாபுரத்தில் எருதாட்ட விழா 25 காளைகள் பங்கேற்பு
வீட்டுமனை பட்டா கேட்டு பெண்கள் திடீர் சாலை மறியல்
காளிப்பட்டி கந்தசாமி கோயில் தைப்பூச விழா தேருக்கு சாரம் கட்டும் பணி மும்முரம்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!