எருமப்பட்டி அருகே கிணற்றில் விழுந்த பெண் உயிருடன் மீட்பு
11/22/2020 1:57:46 AM
சேந்தமங்கலம், நவ.22: எருமப்பட்டி அடுத்த வடவத்தூரை சேர்ந்த விவசாயி புஷ்பராஜ்(50). இவரது மனைவி மல்லிகா(45). இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலம் ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ளது. நேற்று முன்தினம் மாலை, மல்லிகா தோட்டத்திற்கு துணி துவைக்க சென்ற போது, கால் தவறி 60 அடி ஆழ கிணற்றினுள் விழுந்துவிட்டார். அவரது சத்தம் கேட்டு ஓடிவந்த புஷ்பராஜ், நாமக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த நிலைய அலுவலர் ராஜேஸ்வரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சுமார் 1மணி நேரம் போராடி மல்லிகாவை உயிருடன் மீட்டனர்.
மேலும் செய்திகள்
ஆன்லைன் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
விவசாயிகள் குறைதீர் கூட்டம்; நாளை நடக்கிறது
மது விற்ற வாலிபர் கைது
ஸ்டூடியோவில் கேமரா திருட்டு
மனைவியை தற்கொலைக்கு தூண்டியவருக்கு 5 ஆண்டு சிறை
திமுகவில் இணைந்த அதிமுக பிரமுகர்
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!