வேலூரில் சிறைக்காவலர்கள் சார்பில் கொரோனா விழிப்புணர்வு பைக் பேரணி
11/21/2020 12:07:45 AM
வேலூர், நவ.21: வேலூரில் கொரோனா குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மத்திய சிறைக்காவலர்கள் பைக் பேரணியில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களிடம் அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. மேலும் காவல்துறை சார்பில் முக்கிய இடங்களில் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கினர்.
இந்நிலையில், வேலூர் மத்திய சிறைச்சாலை சார்பில் சிறைக்காவலர்களை கொண்டு பைக் பேரணி நேற்று காலை நடந்தது. இந்த பேரணியை சிறை கண்காணிப்பாளர் ஆண்டாள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சிறை வளாகத்தில் இருந்து தொடங்கிய ைபக் பேரணி டிஐஜி அலுவலகம் வழியாக, சிறைக்காவலர் குடியிருப்பு, சிறைக்காவலர்களுக்கான பயிற்சி மைதானம் வழியாக பாகாயம் வரை சென்று மீண்டும் சிறை வளாகத்தில் முடிவடைந்தது. இதில் விழிப்புணர்வு வாசகங்களுடன் சென்ற சிறைக்காவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் செய்திகள்
எருது விடும் விழா கோலாகலம் டெல்லி குழுவினர் ஆய்வு அணைக்கட்டு அருகே 2 கிராமங்களில்
தேசிய அளவில் பதக்கம் வென்ற 43 பேருக்கு ₹1.68 லட்சம் ஊக்கத்தொகை வேலூர் மாவட்டத்தில் 2018-19ம் ஆண்டில்
தவில் வித்வான் மயங்கி விழுந்து சாவு கே.வி.குப்பம் அருகே திருமண நிகழ்ச்சியில்
வேலூர் அருகே கலெக்டர் அலுவலக ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு அடுத்தடுத்த சம்பவங்களால் மக்கள் பீதி
கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்க ₹18.17 கோடி நிதி ஒதுக்கீடு அரசு முதன்மை செயலாளர் உத்தரவுஅரசு கலை மற்றும் அறியவில் கல்லூரிகளில் பணியாற்றும்
மாடு விடும் விழாவில் போலீஸ் தடியடி 3 இடங்களில் காளைகள் முட்டி 48 பேர் படுகாயம் காட்பாடி அருகே பரபரப்பு
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!