அணைக்கட்டு காவல்நிலையத்தில் பணியாற்றியவர் கொரோனாவால் இறந்த எஸ்எஸ்ஐ குடும்பத்துக்கு 11.74 லட்சம் நிதியுதவி டிஐஜி வழங்கினார்
11/21/2020 12:07:37 AM
வேலூர், நவ.21: அணைக்கட்டு காவல்நிலையத்தில் பணியாற்றி, கொரோனாவால் பலியான சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்துக்கு ₹11.74 லட்சம் நிதியுதவியை டிஐஜி காமினி வழங்கினார்.வேலூர் மாவட்டம் அணைக்கட்டு காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சண்முகம். இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி மரணமடைந்தார். அவருக்கு மனைவியும், ஒரு மகள், இரு மகன்கள் உள்ளனர். அவர்களின் நலனை கருத்தில் ெகாண்டு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகள் முதல் போலீசார் வரை தங்கள் விருப்பத்தின் பேரில் நன்கொடையாக ₹11 லட்சத்து 74 ஆயிரத்து 50 பெறப்பட்டது.
நேற்று வேலூர் எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி செல்வகுமார் முன்னிலையில் வேலூர் சரக டிஐஜி காமினி, சண்முகத்தின் மனைவி திலகவதி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் ₹11.74 லட்சம் நிதியுதவியை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஆம்பூர் டிஎஸ்பி சச்சிதானந்தம், வேலூர் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அசோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
எருது விடும் விழா கோலாகலம் டெல்லி குழுவினர் ஆய்வு அணைக்கட்டு அருகே 2 கிராமங்களில்
தேசிய அளவில் பதக்கம் வென்ற 43 பேருக்கு ₹1.68 லட்சம் ஊக்கத்தொகை வேலூர் மாவட்டத்தில் 2018-19ம் ஆண்டில்
தவில் வித்வான் மயங்கி விழுந்து சாவு கே.வி.குப்பம் அருகே திருமண நிகழ்ச்சியில்
வேலூர் அருகே கலெக்டர் அலுவலக ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு அடுத்தடுத்த சம்பவங்களால் மக்கள் பீதி
கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்க ₹18.17 கோடி நிதி ஒதுக்கீடு அரசு முதன்மை செயலாளர் உத்தரவுஅரசு கலை மற்றும் அறியவில் கல்லூரிகளில் பணியாற்றும்
மாடு விடும் விழாவில் போலீஸ் தடியடி 3 இடங்களில் காளைகள் முட்டி 48 பேர் படுகாயம் காட்பாடி அருகே பரபரப்பு
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!