பாதுகாப்புக்குழு கூட்டத்தில் தீர்மானம் கும்பகோணம் அருகே கோயிலில் சிலைகள் உடைப்பு
11/20/2020 12:16:03 AM
கும்பகோணம், நவ. 20: கும்பகோணம் அருகே கோயிலில் இருந்த சிலைகளை உடைத்த போதை நபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த நாச்சியார்கோவில் குப்பாங்குளம் கிராமத்தில் செல்வ விநாயகர் கோயில் உள்ளது. நேற்றுமுன்தினம் இரவு பூசாரி, பூஜையை முடித்து விட்டு கோயிலை பூட்டி சென்றார். இந்நிலையில் அன்று இரவு அதே பகுதியை சேர்ந்த விஜய் (32), கதிரவன் (48) ஆகியோர் போதையில் கோயில் கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.
பின்னர் அங்கிருந்த நவக்கிரக சாமி சிலைகளை உடைத்துள்ளனர். இந்த சத்தம் கேட்டு அருகில் வசித்து வரும் கோயில் நிர்வாகி சக்கரவர்த்தி, கோயிலுக்கு விரைந்து சென்று பார்த்து போது அங்கு சிலைகள் உடைந்து கீழே கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.பின்னர் அவர் கூச்சலிட்டத்தால் பொதுமக்களும் கோயில் முன்பு திரண்டனர். தகவல் அறிந்த நாச்சியார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து சாமி சிலைகளை சேதப்படுத்திய 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
திருட்டு, காணாமல் போன ரூ.11 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன் மீட்பு
குடவாசல் பஸ் நிலையத்தில் சுகாதாரமற்று பயன்பாடில்லாத குடிநீர் தொட்டி, வாஷ்பேஷின்
திருவாரூர் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் பணிபுரிந்து நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி
சிஐடியூ வலியுறுத்தல் உரிமையாளர்களிடம் எஸ்பி ஒப்படைப்பு தொற்று நோய் பீதியில் பொதுமக்கள் நன்னிலம் அருகே டாஸ்மாக் கடையில் ரூ.25 ஆயிரம் மதுபாட்டில்கள் கொள்ளை
பட்டப்பகலில் போலீஸ் என கூறி மூதாட்டியிடம் 5 பவுன் நகை நூதன திருட்டு மர்ம நபர்களுக்கு வலை
தஞ்சையில் வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமரா செயல்படவில்லை
கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்
20-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்