திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா அண்ணாமலையார் கோயிலில் விநாயகர் உற்சவம் இன்று அதிகாலை கொடியேற்றம்
11/20/2020 12:13:11 AM
திருவண்ணாமலை, நவ.20: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீபத்தையொட்டி எல்லை தெய்வ வழிபாட்டின் 3ம் நாளான நேற்று விநாயகர் உற்சவம் நடந்தது.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பாக நடைபெற வேண்டி கொடியேற்றத்திற்கு 3 நாட்களுக்கு முன் எல்லை தெய்வ வழிபாடு நடைபெறும். அதன்படி முதல்நாள் துர்க்கையம்மன், 2ம்நாள் பிடாரியம்மன் பவனி நடந்தது. 3ம் நாளான நேற்று, விநாயகர் உற்சவம் நடந்தது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயில் 5ம் பிரகாரத்தில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் விநாயகர் பவனி வந்து அருள்பாலித்தார். இந்நிலையில் தீபத்திருவிழா இன்று காலைகொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதிகாலை 5.30 மணி முதல் காலை 7 மணி வரை 3ம் பிரகாரத்தில் உள்ள தங்க கொடி மரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
முதல் நாளான இன்று காலை 11 மணி அளவில் கோயில் 5வது பிரகாரத்தில் விநாயகர், சந்திரசேகர் பவனி நடக்கிறது. இரவு உற்சவத்தில் பஞ்சமூர்த்தி பவனி நடக்கிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் நிறைவாக, வரும் 29ம்தேதி 2668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்படும். கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் சுவாமி வீதியுலாவை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. அதனால், கோயில் ஊழியர்கள் மற்றும் திருப்பணியாளர்கள் மட்டுமே இதில் பங்கேற்பார்கள்.
மேலும் செய்திகள்
கிளினிக் நடத்திய போலி டாக்டர் தப்பியோட்டம் ஜமுனாமரத்தூரில் பரபரப்பு 10ம் வகுப்பு வரை படித்துவிட்டு
மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி ₹2 கோடி மோசடி பாதிக்கப்பட்டவர்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார் திருவண்ணாமலையில்
100 நாள் வேலை கேட்டு தொழிலாளர்கள் திடீர் மறியல் பிடிஓ பேச்சுவார்த்தை கலசபாக்கம் அருகே பரபரப்பு
106 யூனிட் மணல் பதுக்கிய ரியல் எஸ்டேட் அதிபர் கைது போளூர் அருகே குடோனில்
ைகைதான கோவிந்தசாமி. (தி.மலை) கொரோனா சிகிச்சைக்காக 1,470 படுக்கை வசதிகள் கலெக்டர் தகவல் திருவண்ணாமலை மாவட்டத்தில்
100 நாள் வேலை வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் பிடிஓ அலுவலகம் முற்றுகை: அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை ஆரணியில் பரபரப்பு
23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!
ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!
குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!
அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!