7 மாதமாக சம்பளம் நிறுத்திவைப்பு துப்புரவு பணியாளர்கள் ‘ஸ்டிரைக்’
11/11/2020 7:35:51 AM
தர்மபுரி, நவ.11: தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் 30க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக, துப்புரவு பணியாளர்களுக்கு கடந்த 7 மாதமாக சம்பளம் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பஞ்சாயத்து தலைவரிடம் பல முறை வலியுறுத்தியும், புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், தீபாவளிக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், சம்பளம் தரக் கோரி துப்புரவு பணியாளர்கள், பஞ்சாயத்து தலைவரிடம் முறையிட்டுள்ளனர். ஆனால், பஞ்சாயத்து தலைவர் சம்பளம் வழங்க மறுத்ததோடு இம்மாத சம்பள பணம் மட்டுமே வழங்க முடியும். நிலுவை சம்பளத்தை தரமுடியாது எனக் கூறியுள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த துப்புரவு பணியாளர்கள், ஒகேனக்கல் பேருந்து நிலையம் முன்பு நேற்று வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, தகவல் அறிந்த கூத்தப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர் சம்பவ இடத்திற்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ேபச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, சம்பள பணம் முழுவதையும் வாங்கி தருவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியதன் ேபரில், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
மேலும் செய்திகள்
நோய், நொடியிலிருந்து கால்நடைகளை காக்க சிறப்பு வழிபாடு
பொறுப்பேற்பு
மக்கள் சபை கூட்டம்
தர்மபுரியில் தைப்பூச விழா இன்று துவக்கம் பெண்கள் மட்டுமே வடம் பிடிக்கும் தேரோட்டம்
கிழக்கு-மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்