மணவாடி பெருமாள்பட்டி காலனியில் அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்
11/10/2020 6:29:14 AM
கரூர், நவ. 10: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மணவாடி அடுத்துள்ள பெருமாள்பட்டி காலனி (வடக்கு) பகுதியினர் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: இந்த பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் மற்றும் மின்சார வசதியின்றி மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு அதிகளவு உள்ளது. ஒரு சில பகுதிகளில் மட்டும் குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது. எங்கள் பகுதிக்கு இதுபோன்ற வசதிகள் செய்து தரப்படவில்லை. இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்டவர்களிடம் புகார் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. எனவே எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
கரூர் காமராஜ் மார்க்கெட் பகுதியில் சுகாதார சீர்கேட்டில் இரட்டை வாய்க்கால்
பள்ளப்பட்டி பேரூராட்சியில் கொரோனா தடுப்பு மருத்துவ முகாம்
தோகைமலையில் உரம் விலை உயர்வை கண்டித்து விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் கரூர் பெரியகுளத்துப்பாளையம் பகுதியில் சிதிலமடைந்து கிடக்கும் மகளிர் சுகாதார வளாகம்
சீரமைக்க கோரிக்கை பதிவு திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளுக்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் அலங்கார மணவறை ஏற்பாடு
தாந்தோணிமலை வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் சிறுவர் பூங்காவில் சேதமடைந்த விளையாட்டு உபகரணங்கள்
23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!
ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!
குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!
அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!