லைன்மேன்களை பணியமர்த்த கோரி மின்வாரிய அலுவலகம் முற்றுகை
11/10/2020 6:26:52 AM
திருப்பூர், நவ.10: திருப்பூர் போயம்பாளையம், ஆர்.கே.நகர் மின்வாரிய அலுவலகத்தில் கூடுதல் லைன் மேன்களை பணியமர்த்த கோரி இந்திய கம்யூ., கட்சியினர் நேற்று அந்த மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்திய கம்யூ., நிர்வாகி மோகன் தலைமை வகித்தார். இரண்டாம் மண்டல குழு துணை செயலாளர் விஜய், போயம்பாளையம் கிளை செயலாளர் சசிகுமார், மோட்டார் சங்க மாவட்ட துணைத்தலைவர் மகேந்திரகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில், ஆர்.கே.நகர் மின் வாரிய அலுவலகத்தில் லைன் மேன் பற்றாக்குறையை போக்க வேண்டும். லைன் மேன்கள் பழுது நீக்கிய பின் பணம் கேட்பதை நிறுத்த வேண்டும். போயம்பாளையம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டை சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்து முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் மின்வாரிய அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகள்
மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் திருப்பூர் மாநகரில் கொடி அணிவகுப்பு
ஸ்டாலின் விளம்பர பாதகைகள் அகற்றம் மாநகராட்சி அதிகாரிகளை திமுகவினர் முற்றுகை
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுபாட்டு அறை திறப்பு
மூலப்பொருட்கள் விலை உயர்வு எலாஸ்டிக் விலை 30 சதவீதம் உயர்வு சங்க கூட்டத்தில் தீர்மானம்
5 கடைகளில் தொடர் திருட்டு சிசிடிவியில் பதிவான காட்சிகளை கொண்டு போலீஸ் விசாரணை
விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டுக்கான இயக்கம்
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்
ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்