தியேட்டர்களை திறக்கும் பணிகள் தீவிரம்
11/10/2020 6:26:43 AM
திருப்பூர், நவ.10: திருப்பூரில் தியேட்டர்களை திறக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, தமிழக அரசு திரையரங்குகளை மூட உத்தரவிட்டது. பல கட்ட பரிசீலனைக்குப்பிறகு இன்று (10ம் தேதி) முதல் பல்வேறு வழிகாட்டுதல் அடிப்படையில், தியேட்டர்களை திறக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. வழிகாட்டுதல்படி கிருமிநாசினி தெளித்தல், இடைவெளி விட்டு, பார்வையாளர்கள் அமர்வதற்கான குறியீடு ஏற்படுத்துதல் உட்பட பணிகளை திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நுழைவாயிலில் ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு, உடல் வெப்ப பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. தியேட்டர்கள் திறப்புக்கு பிறகும் முறையாக கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என சுகாதாரத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
உடுமலை, மடத்துக்குளம் தொகுதிக்கு பறக்கும்படை குழு நியமனம்
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைக்கும் திட்டத்தை கைவிட கோரி கவன ஈர்ப்பு கூட்டம்
காங்கயம் மாடுகள் ரூ.20 லட்சத்துக்கு விற்பனை
ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி உடுமலையில் கிரிக்கெட் போட்டி
திருமூர்த்தி அணை நீர்மட்டம் சரிவு
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்