திருப்பதியில் மேம்பால பணிகள்; பழைய ரேணிகுண்டா சாலையை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்: மாநகராட்சி கமிஷனர் தகவல்
11/9/2020 2:29:44 AM
திருப்பதி, நவ.9: திருப்பதியில் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் பழை ரேணிகுண்டா சாலையை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்று மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார். திருப்பதியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை மாநகராட்சி கமிஷனர் கிரிஷா நேற்று ஆய்வு செய்தார். அப்போது, அவர் பேசியதாவது: ‘திருப்பதி நகர மக்களின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாகவும், திருமலை கோயிலுக்கு வரும் பக்தர்கள் போக்குவரத்து இடையூறு இல்லாமல் செல்லவும் மாநில அரசு மற்றும் திருப்பதி தேவஸ்தானம் இணைந்து மேம்பால பணிக்கு நிதி ஒதுக்கியது.
இந்த நிதிகள் மூலம் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளில் தற்போது பில்லர்கள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ராமானுஜர் ஜங்சன் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பஸ் நிலையத்திலிருந்து ரேணிகுண்டா வழியாக செல்பவர்கள் பழைய ரேணிகுண்டா சாலையை பயன்படுத்தி கொள்ளலாம். இதனால், பெருமளவு போக்குவரத்து நெரிசல் குறையும். இவ்வாறு அவர் பேசினார். பின்னர், மேம்பால பணிகள் குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதில், கூடுதல் கமிஷனர் அரித்தா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி மாணவர்கள் 50வது நாளாக தொடர் போராட்டம்
சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
அரசு மருத்துவமனை காவலாளியை தாக்கிய 3 பேர் கைது
வடலூர் வள்ளலார் சபையில் 150வது தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது இன்று ேஜாதி தரிசனம்
நடராஜர் கோயிலில் தேசிய கொடியேற்றம்
வேப்பூர் அருகே சோகம் இரட்டையர் உள்பட 3 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி பரிதாப பலி
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!