ஓடும் ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பிரசவம்
11/6/2020 4:18:10 AM
திருப்பூர்,நவ.6: திருப்பூர் எம்.எஸ்.நகர் பகுதியை சேர்ந்தவர் கோபி (25). பனியன் தொழிலாளி. இவரது மனைவி சிவரஞ்சினி (21). கர்ப்பிணியான சிவரஞ்சினிக்கு நேற்று காலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அவரது குடும்பத்தினர் 108 ஆம்புலன்சிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் திருப்பூரில் இருந்து ஆம்புலன்சில் டிரைவர் பிரவின் மற்றும் மருத்துவ உதவியாளர் பாண்டியம்மாள் ஆகியோர் ஒரு ஆம்புலன்சில் சென்று சிவரஞ்சினியை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அப்போது கொங்கு மெயின்ரோடு பகுதியில் வந்த போது பிரசவ வலி அதிகமானதை தொடர்ந்து, சிவரஞ்சினிக்கு ஓடும் ஆம்புலன்சில் பிரசவம் பார்க்கப்பட்டது. இதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து குழந்தையும், தாயும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்கள் இருவரும் நலமாக உள்ளனர்.
மேலும் செய்திகள்
ரூ.6.30 கோடி மதிப்பிலான கோயில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடி: காங்கயம் அருகே துணிகரம்; ஒரே இரவில் 7 வீடுகளில் திருட்டு
பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவர் கைது
திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜ இளைஞரணி ஆலோசனை கூட்டம்
பஸ் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அமைச்சர்கள் நேரில் ஆறுதல்
ரூ.6.30 கோடி மதிப்பிலான கோயில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!