வத்தல்மலையில் காபி விளைச்சல் அமோகம்
10/30/2020 1:36:11 AM
தர்மபுரி, அக்.30: தர்மபுரி அருகே வத்தல்மலையில் சீதோஷ்ண நிலை மாற்றத்தல் காபி விளைச்சல் அமோகமாக உள்ள நிலையில், கொள்முதலுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி அருகே உள்ள வத்தல்மலை கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது. வத்தல்மலையில் ஆண்டு முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. வத்தல்மலை பகுதியில் தர்மபுரி, மொரப்பூர் ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 9 மலை கிராமங்களில் 498 குடியிருப்புகள் உள்ளன. இக்கிராமங்களுக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 350 ஏக்கரில் காபி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஊடு பயிராக மிளகு, எலுமிச்சை, ஆரஞ்சு, கொய்யா பயிரிட்டுள்ளனர். காபியை பொறுத்தவரை மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பூக்கள் விடுவதும், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அறுவடைக்கு வருவதும் வாடிக்கை. தொடர் மழையால் தற்போது காபி விளைச்சல் அதிகரித்துள்ளது. ஆனால், அறுவடை செய்த காபியை விற்பனை செய்ய வழியின்றி விவசாயிகள் விழிபிதுங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஏக்கருக்கு 1 டன் காபி மகசூல் கிடைக்கும். ஆனால், உரிய விலை கிடைப்பதில் சிக்கல் உள்ளது. எனவே, வத்தல்மலையில் காபி போர்டு எனப்படும் கூட்டுறவு சங்கம் அமைக்க வேண்டும். இடைத்தரகர்கள் தலையீட்டால் உரிய விலை கிடைக்காமல் தவிக்கிறோம். மேலும், வேளாண் துறை சார்பில் பல ஆண்டுகளாக தரமான காபி செடிகளோ, மானிய விலையில் உரங்களோ வழங்கப்படுவதில்லை. எனவே, ஏற்காட்டில் டீ போர்டு உள்ளது போல், வத்தல்மலையிலும் ஏற்படுத்தி காபிக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்றனர்.
மேலும் செய்திகள்
நோய், நொடியிலிருந்து கால்நடைகளை காக்க சிறப்பு வழிபாடு
பொறுப்பேற்பு
மக்கள் சபை கூட்டம்
தர்மபுரியில் தைப்பூச விழா இன்று துவக்கம் பெண்கள் மட்டுமே வடம் பிடிக்கும் தேரோட்டம்
கிழக்கு-மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்