நீர் பனியில் இருந்து பாதுகாக்க காய்கறி பயிர்களுக்கு ஸ்பிரிங்லரில் தண்ணீர் பாய்ச்சும் பணி தீவிரம்
10/30/2020 12:48:09 AM
ஊட்டி, அக். 30: நீர் பனிப் பொழிவு அதிகரித்துள்ள நிலையில், மலை காய்கறிகள் பாதிக்காமல் இருக்க தற்போது ஸ்பிரிங்லர் மூலம் அதிகாலை நேரங்களில் தண்ணீர் பாய்ச்சும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் மழை குறைந்த நிலையில் தற்போது நீர் பனிப் பொழிவு அதிகரித்துள்ளது. குறிப்பாக ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பனிப் பொழிவு அதிகமாக காணப்படுகிறது. இதனால் புல்வெளிகள், மலை காய்கறிகள், தேயிலை செடிகளும் பாதித்து வருகிறது. மாறுபட்ட காலநிலை நிலவுவதால், மலை காய்கறிகள் மற்றும் தேயிலை செடிகளுக்கு நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மலை காய்கறி செடிகள் நீர் பனியில் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மகசூலும் பாதிக்க வாய்ப்புள்ளது.
இதனால் நீர் பனியில் இருந்து மலை காய்கறிகளை காக்கும் பொருட்டு தற்போது அனைத்து பகுதிகளிலும் காலை நேரங்களில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலானோர் மைக்ரோ ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சி நீர் பனியில் இருந்து பயிர்களை காத்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
போக்குவரத்து, டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் நீலகிரியில் 90 சதவீத அரசு பஸ்கள் ஓடவில்லை
ரயில் நிலையங்களில் குடிநீர் வசதி இல்லாததால் சுற்றுலா பயணிகள் பாதிப்பு
கக்குச்சி கிராம ஊராட்சிக்கு பரிசு
கேரட் கழுவும் இயந்திரங்கள் ஆய்வு
முதுமலையில் 5 மாநில புலிகள் காப்பக இயக்குனர்கள் ஆய்வு
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!